இனிமே "பாரத் ரைஸ்" இங்கேயும் கிடைக்கும்.. வெறும் 29 ரூபாய்.. மத்திய அரசு ஹேப்பி நியூஸ்.. மக்கள் குஷி
சென்னை: சாமான்ய மக்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிற மத்திய அரசின் பாரத் அரசி திட்டம்.. தற்போது இதுகுறித்து குட்நியூஸ் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் அரிசி விலை உயர்ந்து வருகிறது.. அதாவது இந்த ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் அதிகரித்து விட்டது.. அதனால்தான், அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக, மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. இதற்கு 'பாரத் அரிசி' என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

கோதுமை: பாரத் கோதுமையை போலவே, இந்த பாரத் அரிசியையும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் அறிமுகப்படுத்தினார்... 5 கிலோ மற்றும் 10 கிலோ பாக்கெட்டுகளில் பாரத் அரிசி கிடைக்க போகிறதாம்..
"பாரத் ரைஸ்" என்ற பெயரில், கிலோ ரூ.29 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 5 லட்சம் டன் பாரத் அரிசி விற்கப்பட உள்ளது.. இதில், தமிழகத்திற்கு, 22,000 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவில் கிடைக்கும்.
மத்திய அரசு: இந்த அரிசியை விற்க, தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் வேன்களில், பாரத் அரிசியை விற்கின்றன.. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பாரத் அரிசி, பாரத் கோதுமை மாவு விற்குமாறு, மத்திய அரசை கூட்டுறவு துறை வலியுறுத்தியிருக்கிறது.
அதாவது, குறிப்பாக, 100 டன் அளவுக்கு பாரத் ஆட்டா, குறிப்பிட்ட அளவு அரிசியை, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக விற்குமாறு, மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறதாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது, தமிழக மக்களுக்கு பெரும் பலனையும், வரவேற்பையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.
பாரத் அரிசி: இந்நிலையில், ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. இத்தனை நாட்களாக ரிலையன்ஸ் கடைகளில் மட்டும் கிடைத்த பாரத் அரிசி இனி விஷால் மெகா மார்ட், ஸ்டார் பஜார், ஜியோ மார்ட் உள்ளிட்ட பல கடைகளில் விற்பனை செய்யப்படும். இதுதவிர, ஆன்லைனிலும் இந்த அரிசி கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும்கூட, பாரத் அரிசி விற்பனைக்கு எந்த தடையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி மூட்டை: அதேபோல இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் என்பதால், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ இந்த பாரத் அரிசி திட்டம் இருக்காது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காரணம், இந்த அரிசி மூட்டையில் பிரதமர் மோடி உட்பட யாருடைய போட்டோவும் பயன்படுத்தப்படவில்லை.. எந்த கட்சியின் சின்னமும் பயன்படுத்தப்படுவதில்லை..
தேர்தல் நேரத்தில், வாக்குகளை குறி வைத்தே, பாஜக அரசு இந்த அரிசி விநியோகிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும்நிலையில், இப்படி ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications