Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையே துள்ளுது.. ஊருக்கு போறீங்களா.. அரசின் மாஸ் அறிவிப்பு.. அதைவிடுங்க.. 100 எலக்ட்ரிக் பஸ் வருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகம், மக்களின் நலனை கருத்தில்கொண்டு, கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. அத்துடன், முன்பதிவு போன்ற வசதிகளிலும் மாற்றங்களை செய்து வரும் நிலையில், அடுத்த அதிரடியை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வாயிலாக குறைந்த கட்டணத்தில் அரசு வழங்கி வருகிறது. மேலும், அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையையும் அளித்து வருகிறது.

100 Electric Buses In Chennai soon, Tamil Nadu Transport Corporation Major Announcement

பயணச்சலுகை: அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், "மகளிர் கட்டணமில்லா பயணம்" திட்டம், பொதுமக்களின் தேவைக்கேற்ப புதிய பேருந்து வழித்தடங்களை தொடங்கி வைத்தல், பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பஸ்கள் கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

அத்துடன், மலைப்பகுதிகளிலும், கட்டணமில்லா பஸ்கள் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்னொரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சொன்னதாவது:

சென்னை மாநகர்: சென்னை மாநகரில் முதல்கட்டமாக, 100 எலக்ட்ரிக் பஸ்களை பரிட்சார்த்த முயற்சியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக, தமிழகம் முழுவதுமே எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 685 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் புதிய பஸ்கள் வாங்கப்படாததால், பஸ் சேவை, பல இடங்களில் தடையாகி உள்ளது. அதை சீர் செய்து வருகிறோம்.

அடுத்த 4 மாதத்திற்குள், 4000 புதிய பஸ்கள், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். எல்லா பஸ்களையும் நிறம் மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. புறநகர் பஸ்களை மட்டுமே மாற்றுகிறோம். சென்னையில் ஓடும், 2,500 பஸ்களில் நிர்பயா திட்டத்தின் கீழ், சிசிடிவி கேமராக்கள் முழுதுமாக பொருத்தப்பட்டு விட்டது" என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+