100 ஆண்டு பழசு.. சென்னை மண்ணடியில் இடிந்த 4 மாடி கட்டிடம்! 4 பேர் நிலை என்ன? களத்தில் மேயர் பிரியா
சென்னை: மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் அமைந்து இருந்த பழமையான கட்டிடம் புதுப்பிக்கும் பணியின்போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
சென்னையின் பழமையான பகுதிகளில் ஒன்றாக மண்ணடி இருக்கிறது. இங்கு 50 ஆண்டுகள், 80 ஆண்டுகள், 100 ஆண்டுகளை கடந்த பழைய கட்டிடங்கள் உள்ளன. அங்குள்ள அரண்மனைக்காரன் வீதியில் பழமையான 4 மாடிக் கட்டிடம் அமைந்து இருந்தது. இதனை புனரமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்து இருக்கின்றன.

இந்த நிலையில் இன்று கட்டிடத்தின் மேற்கூரையிலிருந்து திடீரென மளமளவென இடிந்து விழுந்து தரைமட்டமான கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களின் பெரும்பகுதியும் இடிந்து விழுந்து இருக்கின்றன. கட்டிட பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்பட்ட நிலையில் அது வதந்தி என்றும், 2 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறுகலான பாதையில் கட்டிடம் அமைந்து இருப்பதால் மீட்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அழைக்கப்பட்டனர்.
அதை தொடர்ந்து சென்னை அடையாறு மற்றும் அரக்கோணத்தில் இருந்து தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணிக்கு விரைந்து உள்ளது. கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான தகவல் அறிந்தவுடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் கட்டிட சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தீயணைப்பு துறை டிஜிபி தெரிவித்து இருக்கிறார்.
குறுகலான பாதை என்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். கட்டிடத்தின் உரிமையாளர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் நவீன கருவிகள் உள்ளன. அவர்களை அழைத்து உள்ளோம்." என்றார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications