2ம் அலை அச்சம்.. இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. மகாராஷ்டிரா மோசம்.. இன்றைய நிலவரம்
சென்னை: இந்தியாவில் மீண்டும் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. நாளுக்கு நாள் இந்தியாவில் பதிவாகும் கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40611 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,179,059 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 197 பேர் பலியாகி உள்ளனர்.
அங்கு மொத்தம் 11,686,330 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160,200 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மிக மோசமான நிலை காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 25,04,327 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 22,34,330 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 53457 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.
கேரளா
கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,05,468 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,76,571 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4508 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
கர்நாடகா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1445 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,71,647 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,44,917 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12444 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,68,367 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,47,139 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12609 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,94,044 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,84,471 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7191 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.