"சக்கரம் சுத்துதே".. இவ்ளோ துணிச்சல் "அங்கேகூட" இல்லயே.. அப்பட்டமான கார்ப்பரேட் மாடல்.. யார் பாருங்க
சென்னை: 12 மணி நேர வேலை திட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதுதான் திராவிட மாடலா? என்று விவசாயிகள் கூட்டமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது.. அத்துடன், வேலை நேரத்தை அதிகரித்து முதலாளித்துவ சுரண்டலுக்கு துணை போகும் அப்பட்டமான கார்ப்பரேட் மாடலா? இது என்றும் திமுக அரசை விமர்சித்துள்ளது.
நேற்றையதினம், கடும் எதிர்ப்புகளுக்கிடையே 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
12 மணி நேர வேலை மசோதாவுக்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, மமக ஆகிய கட்சிகள் பேரவையிலேயே எதிர்ப்புகளை பதிவு செய்தன..

திமுக அரசு: தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023-ஐ - குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது. நாடு முழுவதும் தொழிலாளர்களும், தொமுச, ஏஐடியூசி, சிஐடியூ எச்எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் தெரிவித்த கடுமையான எதிர்ப்பை நிராகரித்து, பாஜக அரசு கடந்த 2020ம் ஆண்டில் நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தின் நீட்சியாகவே இந்த திருத்த சட்டம் அமைந்துள்ளதுதாக இக்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
தமிழக அரசு இன்று நிறைவேற்றியுள்ள 12 மணி நேர வேலை மசோதாவிற்கு காவிரி- வைகை - குண்டாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.அர்ச்சுனன் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'பின்னோக்கி சுழலும் வரலாற்று சக்கரம்' என்ற தலைப்பில் அறிக்கை அவர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கை: அந்த அறிக்கையில், " 12 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தொழிலாளிகளைக் கசக்கிப் பிழிந்து உழைப்பை சுரண்டிய முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து 8 மணி நேர வேலை. 8 மணி நேர ஓய்வு. 8 மணி நேர உறக்கம் என்ற உழைப்பவர்களின் உரிமைகுரல் முழங்கியது. இதனை வலியுறுத்தி 1886 மே 3-ம் தேதி அமெரிக்க சிகாகோ நகரில் நடந்த பேரணியில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
தொழிற்சங்க தலைவர்கள் 7 பேர் தூக்குத்தண்டனை பெற்றனர். இதன்பின் பாரிஸ் நகரில் கூடிய சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் 1890 முதல் மே முதல் நாளை சர்வதேச தொழிலாளர் உரிமை தினமாக கடைபிடிக்க முடிவு செய்தது. இந்தியாவில் முதல் முதலில் சென்னையில் 1923-ல் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார்.
12 மணி நேரம்: இந்நிலையில் சரியாக 100 ஆண்டுகள் கழித்து உலகில் எந்த ஒரு ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளும் செய்ய துணியாத, இந்தியாவில் மத்திய அரசோ வேறு மாநில அரசுகளோ கொண்டு வர முயலாத 12 மணி நேர வேலை திட்ட மசோதா தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசின் தொழிலாளர் நல கொள்கையா? இல்லை, வேலை நேரத்தை அதிகரித்து முதலாளித்துவ சுரண்டலுக்கு துணை போகும் அப்பட்டமான கார்ப்பரேட் மாடலா? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications