ஹார்ட் ஃபெயிலியர்.. உயிர் பிழைக்க துடிக்கும் இதயம்! 12 வயது சிறுமிக்கு துயரம்.. காப்பாற்ற உதவுங்கள்
சென்னை: எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதயம் செயலிழந்துவிடும் அபாயத்தில் 12 வயது சிறுமி பிரியதர்ஷினி இருக்கிறார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர், பிறந்தது முதல் கடுமையான இதய நோயுடன் போராடி வருகிறார். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் எனில் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட வேண்டும். இதற்காக ரூ.3 லட்சம் ஆகும். சிறுமியின் உயிரை காப்பாற்ற முடிந்த உதவியை செய்யுங்கள்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த சிறுமி பிரியதர்ஷினி. 12 வயதே ஆன பிரியதர்ஷினி பிறந்தது முதல் கடுமையான இருதய நோயுடன் போராடி வருகிறார். ஏழு மாத பச்சிளங்குழந்தையாக இருந்தபோது, மூச்சுவிட சிரமப்பட்டு, இதயத் துடிப்பு சீரற்றதாக மாறியது. உடனடியாக பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதைக் கேட்ட பிரியதர்ஷினியின் பெற்றோர் உடைந்து போயினர். மாமாவின் உதவியுடன், அவர்கள் MIOT மருத்துவமனைக்கு பிரியதர்ஷினியை அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள், பிரியதர்ஷினிக்கு அரிதான மற்றும் தீவிரமான "Aortopulmonary Window with Severe Pulmonary Hypertension" என்ற நிலை இருப்பதனை உறுதி செய்தனர்.
இந்த பாதிப்புக்கு உடனடியாக திறந்த இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற ஒரே வழி என்று கூறினார்கள். சிகிச்சைக்கு ₹3,00,000 செலவாகும். பிரியதர்ஷினியின் தந்தை மன்னாங்கட்டி, விவசாய கூலித்தொழிலாளியாக உள்ளார். எனவே, இது அவருக்கு கற்பனை செய்ய முடியாத பெரிய தொகையாகும். "ஒவ்வொரு காலையிலும் வேலைக்குச் செல்லும் முன், மகளின் முகத்தைப் பார்த்து, நான் திரும்பி வரும் வரை அவள் பலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பேன்," என்று வேதனையுடன் மன்னாங்கட்டி கூறினார்.

"விவரம் அறியாத மகள் பிரியதர்ஷினியும், 'அப்பா, என் இதயம் எப்போது சரியாகும்?' என்று கேட்பாள். ஆனால் என்னிடம் பதில் இருக்காது. அவளது வாழ்க்கை என்னிடம் இல்லாத பணத்தைப் பொறுத்தது என்று நினைக்கும்போது நான் உதவியற்றவனாக உணர்கிறேன்," என்று உருக்கமாகக் அவரது தந்தை கூறினார்.
இத்தனை வலிகளுக்கு மத்தியிலும் எப்படியாவது மகளை காப்பாற்ற வேண்டும் என்று தினமும் போராடிக்கொண்டு இருக்கிறார். பலரிடம் கடன் வாங்கியும், உதவி கேட்டும், முன்னெப்போதையும் விட கடினமாக உழைத்தும் வருகிறார். எனினும், 3 லட்சம் என்பது அவரது சக்திக்கு அப்பாற்பட்டது.

பிற சிறுமிகளைப் போலவே பள்ளிக்கு சென்று, சக தோழிகளுடன் விளையாடி மகிழ்ந்து, ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என கனவு காணும் பிரியதர்ஷினிக்கு, அவரது பலவீனமான இதயம் எளிமையான விஷயங்களைக் கூட செய்யவிடாமல் தடுக்கிறது.எனவே, எல்லா குழந்தைகளைப் போலவே இயல்பான வாழ்க்கையை வாழ, பிரியதர்ஷினியின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி தேவைப்படுகிறது.
சிறியதோ, பெரியதோ, ஒவ்வொரு பங்களிப்பும் அவளுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கு ஒரு படி நெருக்கமாக கொண்டு செல்லும். எனவே உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். பிரியதர்ஷினியின் இருதய குறைபாட்டை குணப்படுத்த நாம் கைகோர்ப்போம். நாம் அனைவரும் இணைந்து பிரியதர்ஷினியைக் காப்பாற்றலாம்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications