Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐரோப்பா நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: துபாய் வழியாக விமானம் மூலம் தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் அவர்கள் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    தமிழகத்தில் 2 பேருக்கு கொரானா? | வந்து விட்டது கொரானா தடுப்பூசி

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

    14 people reached tamilnadu has coronavirus symptoms

    விமான நிலையங்களில் அந்தந்த மாநில சுகாதாரத் துறையினர் கண்காணித்து பயணிகளுக்கு பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் துபாய் விமானத்திலிருந்து இன்று தமிழகம் வந்தவர்களை சுகாதாரத் துறையினர் தெர்மல் பரிசோதனை செய்தனர்.

    அதில் 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து துபாய் வழியே விமானத்தில் வந்தவர்கள் என தெரியவந்தது.

    இதையடுத்து 14 பேரும் பூந்தமல்லி பொது சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் கண்காணிப்பு மற்றும் ரத்த பரிசோதனை மட்டுமே அவர்களுக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என தெரியவரும். அதுவரை இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வருவர் என கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+