கோவை உளவுத்துறை உதவி கமிஷனர் மீண்டும் மாற்றம்.. 14 அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர் - டிஜிபி அதிரடி!
சென்னை : கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக இருந்த பார்த்திபன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்து வரும் பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் டி.எஸ்.பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் கோவையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து கோவையில் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
காலியாக இருந்த கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளர் பொறுப்புக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராக இருந்த பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் அப்பணியில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளார்.

அதிரடி பணியிட மாற்றம்
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்து வரும் பிரபாகரன் - கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் பார்த்திபன் - கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு அதிரடிப்படை டிஎஸ்பி சுகுமார் - கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார்.

டி.எஸ்.பிக்கள் டிரான்ஸ்பர்
தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருக்கும் ராஜேஸ்வரன் - நெல்லை ஜங்சன் சரக உதவி கமினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் வினோஜி - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பி ரமேஷ் - கள்ளக்குறிச்சி சப்-டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை
மதுரை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ரவிக்குமார் - கோவை மாநகரம் ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஈஸ்வரன் - திருப்பூர் மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிஎஸ்பி பிரகாஷ் - சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகர் உளவுத்துறை உதவி ஆணையாளர் மணிமேகலை - செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

டிஜிபி உத்தரவு
திருச்சி மாநகர குற்ற ஆவண காப்பக உதவி ஆணையாளர் கென்னடி - திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் பாரதிதாசன் - திருச்சி மாவட்டம் ஜீயர்புரம் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள டிஎஸ்பி சகாயஜோஸ் - தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆலங்குளம் சரக டிஎஸ்பி பொன்னரசு - தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications