தொடரும் செம மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 167 ஏரிகள் 100% நிரம்பியாச்சு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 167 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.
Recommended Video
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 100% கொள்ளளவை எட்டிய 167 ஏரிகள் - வீடியோ
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 167 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன.

290 ஏரிகள் 75% தனது கொள்ளளவை எட்டியுள்ளன. 219 ஏரிகள் 50% கொள்ளளவை எட்டியுள்ளன. 202 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளது. 30 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக தனது கொள்ளளவை எட்டியுள்ளது என பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.

சென்னையையடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை நிலவரப்படி 7000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. 2015ம் ஆண்டு 30,000 கன அடி நீர் இங்கிருந்து திறந்து விடப்பட்டபோது சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications