தமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, முகிலன், பாஸ்கரன், அனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முத்துக்கருப்பன், என். குமார், பாரதி, ரவி, லாவண்யா, ரமேஷ் பாபு, ராமமூர்த்தி, டி.குமார் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 19 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மக்களவைத் தேர்தல் பணிக்காக 19 காவல் ஆய்வாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தற்போது தேர்தல் முடிந்த நிலையில் அவர்கள் 19 பேரும் மீண்டும் பழைய இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 17 பேர் இடமாற்றம் செய்யட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications