சார் பதிவாளர்கள் திடீர் டிரான்ஸ்பர்.. மதுரை, தென்காசி மாவட்டங்களிலுமா? தமிழக பதிவுத்துறை உத்தரவு
சென்னை: பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், சார் பதிவாளர்களுக்கு பொது மாறுதல் வழங்குவது, சில ஆண்டுகளாகவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனவே, சார் பதிவாளர்கள் சொந்த காரணங்களுக்காக, விரும்பிய ஊர்களுக்கு, இடமாறுதல் பெற முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதையடுத்து, தற்போது அரசின் அனுமதியுடன், சொந்த காரணங்கள் அடிப்படையில், இடமாறுதல் வழங்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதன்படி ஏற்கனவே, 19 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் 17 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பதிவுத்துறை தலைவர்: திருச்சி, கோவை, திருவாரூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தர்மபுரி, காஞ்சிபுரம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த, 17 சார் பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
"ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா காஞ்சிபுரம் நிர்வாக சார்பதிவாளராகவும், பெரியநாயக்கன்பாளையம் தற்காலிக இணை சார்பதிவாளர் ரமேஷ் கிருஷ்ணகிரி நிர்வாக சார்பதிவாளராகவும், கோபிசெட்டிபாளையம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் தமிழ்செல்வி பாளையங்கோட்டை வழிகாட்டி சார்பதிவாளராகவும், கீழ்ப்பழுர் சார்பதிவாளர் சேசோபா அரியலூர் 1 எண் இணை சார்பதிவாளராகவும், நாகலூர் சார்பதிவாளர் அண்ணாதுரை பெரம்பலூர் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4 இணை சார் பதிவாளர்: திருப்பூண்டி சார்பதிவளர் வாசுதேவன் சென்னை துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலக ஆழ்ந்த சீராய்வு சார்பதிவாளராகவும், தருமபுரி 2 எண் இணை சார்பதிவாளர் மாரியப்பன் மாரண்டஹள்ளி சார்பதிவாளராகவும், பாளையங்கோட்டை முறப்பநாடு சார்பதிவாளர் கண்ணன் குன்றத்தூர் சார்பதிவாளராகவும் காஞ்சிபுரம் 4 எண் இணைசார்பதிவாளர் நெடுஞ்செழியன் செட்டிகுளம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல பல்லாவரம் சார்பதிவாளர் அறிவழகன் புதுக்கோட்டை நிர்வாக சார்பதிவாளராகவும், வேலகவுண்டம்பட்டி சார்பதிவாளர் அருள்குமார் கரூர் அசல் பத்திரப்பதிவு கண்காணிப்பாளராகவும், செங்கல்பட்டு 1 எண் இணை சார்பதிவாளர் அன்பழகன் துவரங்குறிச்சி சார்பதிவாளராகவும், அருப்புக்கோட்டை சார்பதிவாளர் மாலினி ஜெயஸ்ரீ மதுரை தெற்கு புலனாய்வு சார்பதிவாளராகவும்,
செய்யூர்: தென்காசி 2 எண் இணை சார்பதிவாளர் மதிவாணன் சேத்தூர் சார்பதிவாளராகவும், பெரியகுளம் சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளர் சோபனா செங்கல்பட்டு தலைவர் அலுவலக நிர்வாக சார்பதிவாளராகவும், செய்யூர் சார்பதிவாளர் பசுமதி மயிலாடுதுறை சீட்டு மற்றும் சங்கம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications