கொங்குவில் தூண்டில்! அதிமுகவிலிருந்து திமுகவில் ஐக்கியமாகும் இரு சீனியர்கள்?.. எடப்பாடிக்கு ஷாக்
சென்னை: கோவை மாவட்டத்தில் அதிருப்தியில் உள்ள 2 அதிமுக சீனியர் தலைகள் இன்று திமுகவில் ஐக்கியமாக முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சொல்லிக் கொள்ளும்படியாக தலைவர்கள் யாரும் இல்லாததால் பல தொண்டர்கள் அரசியலிலிருந்து விலகியும் மாற்றுக் கட்சியில் இணைந்தும் தங்களது அதிருப்தியை வெளிகாட்டினர்.
மேலும் சசிகலா, தினகரன் தலைமையை ஏற்க விரும்பாமலும் பலர் விலகினர். இதையடுத்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது, இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அந்த இரட்டை தலைமைக்குள்ளே பிரச்சினை வெடித்து நீயா நானா சண்டை நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையையும் ஓபிஎஸ் கூட்டுத் தலைமையையும் விரும்புகிறார்கள். தற்போது அதிமுகவில் ஒருங்கிணைந்த நிலை இல்லாமல் சிதறி கிடக்கிறது. இது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து விசுவாசிகளுக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவில் தொடர்ந்து இருக்க விரும்பும் தொண்டர்கள், ஓபிஎஸ் பக்கமும் எடப்பாடி பக்கமும் மாறி மாறி தாவிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓரங்கட்டப்பட்டவர்கள்
இவர்கள் இருவராலும் அதிருப்தியில் உள்ளவர்கள் , ஓரங்கட்டப்பட்டவர்கள் என மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அப்படி இணைந்தவர்தான் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இந்த நிலையில் கோவை மாவட்டத்திலிருந்து அதிமுக சீனியர் தலைகள் இருவர் திமுகவில் இன்று இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செ மா வேலுச்சாமி
செ மா வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஆகிய 2 பேர்தான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைகிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் கோவையில் நலத்திட்ட உதவிகளை தொடங்குவதற்காக சென்றுள்ளார். அவர் முன்னிலையில் இவர்கள் இருவரும் திமுகவில் இணைவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் மூவருமே கொங்கு மண்டலத்தினர். செ மா வேலுச்சாமி முன்னாள் எம்எல்ஏ ஆவார். 2001, 2006 ஆம் ஆண்டுகளில் பல்லடம் சட்டசபையிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் கோவை மாநகராட்சியின் மேயராகவும் இருந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஆரம்ப காலத்தில் அதிக செல்வாக்குடன் இருந்தவர்.

வி.சி.ஆறுகுட்டி
வி.சி. ஆறுகுட்டி இ- இவர் முன்னாள் எம்எல்ஏ. 2011 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர். மீண்டும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு ஆறுகுட்டி வென்றார். இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ் பக்கம் தாவினார். கொடநாடு வழக்கில் இவரிடமும் இவரது மகன்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஆறுகுட்டிக்கு பிடி இறுகியதாகவும் தெரிகிறது. இவர்களில் வேலுச்சாமி கடந்த ஆண்டு முதலே திமுகவிற்கோ அமமுகவிற்கோ செல்லலாம் என அவரது பெயர் அடிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications