கொங்குவில் தூண்டில்! அதிமுகவிலிருந்து திமுகவில் ஐக்கியமாகும் இரு சீனியர்கள்?.. எடப்பாடிக்கு ஷாக்
சென்னை: கோவை மாவட்டத்தில் அதிருப்தியில் உள்ள 2 அதிமுக சீனியர் தலைகள் இன்று திமுகவில் ஐக்கியமாக முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சொல்லிக் கொள்ளும்படியாக தலைவர்கள் யாரும் இல்லாததால் பல தொண்டர்கள் அரசியலிலிருந்து விலகியும் மாற்றுக் கட்சியில் இணைந்தும் தங்களது அதிருப்தியை வெளிகாட்டினர்.
மேலும் சசிகலா, தினகரன் தலைமையை ஏற்க விரும்பாமலும் பலர் விலகினர். இதையடுத்து அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது, இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அந்த இரட்டை தலைமைக்குள்ளே பிரச்சினை வெடித்து நீயா நானா சண்டை நடந்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையையும் ஓபிஎஸ் கூட்டுத் தலைமையையும் விரும்புகிறார்கள். தற்போது அதிமுகவில் ஒருங்கிணைந்த நிலை இல்லாமல் சிதறி கிடக்கிறது. இது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து விசுவாசிகளுக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அதிமுகவில் தொடர்ந்து இருக்க விரும்பும் தொண்டர்கள், ஓபிஎஸ் பக்கமும் எடப்பாடி பக்கமும் மாறி மாறி தாவிக் கொண்டிருக்கிறார்கள்.

ஓரங்கட்டப்பட்டவர்கள்
இவர்கள் இருவராலும் அதிருப்தியில் உள்ளவர்கள் , ஓரங்கட்டப்பட்டவர்கள் என மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். அப்படி இணைந்தவர்தான் தோப்பு வெங்கடாசலம் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இந்த நிலையில் கோவை மாவட்டத்திலிருந்து அதிமுக சீனியர் தலைகள் இருவர் திமுகவில் இன்று இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செ மா வேலுச்சாமி
செ மா வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஆகிய 2 பேர்தான் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைகிறார்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன. முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் கோவையில் நலத்திட்ட உதவிகளை தொடங்குவதற்காக சென்றுள்ளார். அவர் முன்னிலையில் இவர்கள் இருவரும் திமுகவில் இணைவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்கள் மூவருமே கொங்கு மண்டலத்தினர். செ மா வேலுச்சாமி முன்னாள் எம்எல்ஏ ஆவார். 2001, 2006 ஆம் ஆண்டுகளில் பல்லடம் சட்டசபையிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் கோவை மாநகராட்சியின் மேயராகவும் இருந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் ஆரம்ப காலத்தில் அதிக செல்வாக்குடன் இருந்தவர்.

வி.சி.ஆறுகுட்டி
வி.சி. ஆறுகுட்டி இ- இவர் முன்னாள் எம்எல்ஏ. 2011 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவர். மீண்டும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு ஆறுகுட்டி வென்றார். இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ் பக்கம் தாவினார். கொடநாடு வழக்கில் இவரிடமும் இவரது மகன்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் ஆறுகுட்டிக்கு பிடி இறுகியதாகவும் தெரிகிறது. இவர்களில் வேலுச்சாமி கடந்த ஆண்டு முதலே திமுகவிற்கோ அமமுகவிற்கோ செல்லலாம் என அவரது பெயர் அடிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications