2 தொகுதியில் இடைத்தேர்தலா? .சட்டசபை தேர்தலில் வென்ற 2 அதிமுக 'எம்பிக்கள்'.. என்ன முடிவெடுப்பார்கள்?
சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்பிக்களாக கே.பி.முனுசாமியும், ஆர்.வைத்திலிங்கமும் உள்ளவர்கள். இவர்கள் இந்த முறை சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டனர். இதில் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் இவர்கள் ஏதாவது ஒரு பதவியைத்தான் வகிக்க முடியும். எனவே எந்த பதவியை வகிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறப்போவது உறுதியாகி உள்ளது. எம்பி தேர்தலா அல்லது எம்எல்ஏ தேர்தலா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவது உறுதியாகி உள்ளது. நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஸ்டாலின் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர் வைத்திலிங்கம்
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்கள், எம்பிக்களாகவும் உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்பிக்களாக கே.பி.முனுசாமியும், ஆர்.வைத்திலிங்கமும் உள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கமும் போட்டியிட்டனர்.

எதிர்க்கட்சி
இதில் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருந்தால், இவர்கள் இருவரும் அமைச்சர்களாகி இருப்பார்கள். இப்போது அதிமுக எதிர்க்கட்சியாகி உள்ளதனால் அதற்கு வாய்ப்பில்லை.

வாய்ப்பு இல்லை
எனவே கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகிய இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்களாக தொடர்வார்களா அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி.க்களாக தொடர்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிக வாய்ப்பு
இவர்கள் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையிலேயே புதிதாக 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அது அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பாதகமாகிவிடும். அதேநேரத்தில் அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால், 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான வாய்ப்பு உள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications