2 தொகுதியில் இடைத்தேர்தலா? .சட்டசபை தேர்தலில் வென்ற 2 அதிமுக 'எம்பிக்கள்'.. என்ன முடிவெடுப்பார்கள்?
சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்பிக்களாக கே.பி.முனுசாமியும், ஆர்.வைத்திலிங்கமும் உள்ளவர்கள். இவர்கள் இந்த முறை சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டனர். இதில் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் இவர்கள் ஏதாவது ஒரு பதவியைத்தான் வகிக்க முடியும். எனவே எந்த பதவியை வகிக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இடைத்தேர்தல் நடைபெறப்போவது உறுதியாகி உள்ளது. எம்பி தேர்தலா அல்லது எம்எல்ஏ தேர்தலா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் அபார வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவது உறுதியாகி உள்ளது. நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகு ஸ்டாலின் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர் வைத்திலிங்கம்
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 எம்எல்ஏக்கள், எம்பிக்களாகவும் உள்ளனர். அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்பிக்களாக கே.பி.முனுசாமியும், ஆர்.வைத்திலிங்கமும் உள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமியும், ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கமும் போட்டியிட்டனர்.

எதிர்க்கட்சி
இதில் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகிய இருவருமே வெற்றி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திருந்தால், இவர்கள் இருவரும் அமைச்சர்களாகி இருப்பார்கள். இப்போது அதிமுக எதிர்க்கட்சியாகி உள்ளதனால் அதற்கு வாய்ப்பில்லை.

வாய்ப்பு இல்லை
எனவே கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகிய இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ.க்களாக தொடர்வார்களா அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி.க்களாக தொடர்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிக வாய்ப்பு
இவர்கள் இருவரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையிலேயே புதிதாக 2 எம்.பி.க்களை தேர்வு செய்ய முடியும். அது அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் பாதகமாகிவிடும். அதேநேரத்தில் அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால், 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான வாய்ப்பு உள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications