100 கோடியாமே.. சட்டென ஓபிஎஸ் எடுத்த முடிவு.. துணை நிற்கும் "சக்தி".. ஆட்டம் ஆரம்பம் போல
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 2 முக்கிய அஸ்திரங்களை ஓபிஎஸ் எடுத்துள்ளார்
சென்னை: அதிமுகவில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2 முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமியை சுற்றி நிறைய சிக்கல்கள் கூடிவரும் நிலையில், ஓபிஎஸ் இப்போது முன்பு போல் இல்லை.. செம கூலாக இருக்கிறார்.. கடந்த 15 நாட்களாகவே உற்சாகத்துடனும், குஷியுடனும் வலம் வருகிறார்..
பறந்து பறந்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்.. ஏகப்பட்ட பிளான்களை கையில் வைத்திருக்கிறார்.. ஆதரவாளர்களை, நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்து பேசிவருகிறார்.

டிடிவி + ஓபிஎஸ்
இத்தனை நாளும் மென்று விழுங்கிக் கொண்டு, மறைமுமாக ஆதரவு தந்து கொண்டிருந்த நிலையில், இன்று வெளிப்படையாகவே டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் அழைப்பு விடுத்துவிட்டார்.. அந்த பக்கம் இருந்தும் தினமும் ஏதாவது ஒரு வகையில் சிக்னல் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், 2 தகவல்கள் அதிமுகவுக்குள் கசிந்து வருகிறது.. முதலாவதாக, அதிமுகவை கைப்பற்றும் வகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ், சசிகலா இணைந்து ரூ.100 கோடியில் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர்.. இதற்காக, இருவருமே ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தாராளங்கள்
இதனால், பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது, எடப்பாடி ஆதரவாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.. இதற்கு முன்புவரை ஓபிஎஸ் தரப்பில் இப்படிப்பட்ட பணவிவகாரம் என்பது எழாமலேயே இருந்தது.. யாருக்குமே ஓபிஎஸ் செலவு செய்வதில்லை என்றும், அதனாலேயே ஓபிஎஸ் பக்கம் இருந்த மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்களை இழுக்க கூடுதலான சில தாராளங்களை எடப்பாடி வழங்கியதால்தான், 90 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர் என்றும் சொல்லப்பட்டு வந்தது.

செல்லூரார்
இந்த டெக்னிக்கைதான், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் இணைந்து எடுத்துள்ளனராம்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடனும் பேச்சுவார்த்தையில் சசிகலா, ஓபிஎஸ் தரப்பினர் இறங்கினர். அவரும் ஓபிஎஸ் பக்கம் வர கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல பல எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ், சசிகலாவிடம் பேச்சுவார்த்தையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

தேவர் ஜெயந்தி
இரண்டாவதாக, இந்த ஒரே மாதத்தில், ஓபிஎஸ் மீதான செல்வாக்கு, தென் மண்டலங்களில் கூடிவிட்டநிலையில், விரைவில் ஓபிஎஸ், சசிகலா சந்திப்பு நடைபெற வேண்டும் என்றும் தென்மண்டலத்தில் எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளதாம். அநேகமாக, வரும் தேவர் ஜெயந்திக்குள் இவர்கள் சந்திப்பு இருக்கலாம் என்கிறார்கள். அதேபோல, எடப்பாடி இதுவரை சம்மதம் தெரிவிக்காத நிலையில், பொதுக்குழுக் கூட்டத்தையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

"வைட்டமின் + ப"
ஏற்கனவே கடந்த ஒரு மாதமாகவே, போட்டி பொதுக்குழுவை நடத்த முடியாமல், திணறி வந்தார் ஓபிஎஸ்.. பொறுப்பாளர்களை மாவட்ட வாரியாக நியமித்தும், பலத்தை காட்ட போதுமான ஆதரவாளர்கள் இல்லாததாலும், "வைட்டமின் ப" செலவு செய்ய முயலாததாலும், இந்த பொதுக்குழு தள்ளிப்போய் கொண்டே இருந்ததாக சொல்லப்பட்டது.. இப்போது சசிகலா மறைமுகமாக களத்தில் இறங்கி உள்ளதால், ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் வருவது அதிகரித்துள்ளதுடன், பொதுக்குழுவும் நடத்த திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications