சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 வயது குழந்தை கடத்தல்.. அஸ்ஸாம் மாநில பெண் புகார்
Recommended Video
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டு வயது பெண் குழந்தையை காணவில்லை என்று அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மர்ஜினா (21). இவரது கணவர் அசார் அலி. இவர்களுக்கு திருமணமாகி அஜிதா, ரஜிதா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரான அசார் அலியை பிரிந்து இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது கணவனையும் பிரிந்த மர்ஜினா கடந்த 10 நாட்களாக மூன்றாவதாக அமீது என்பவருடன் வசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரோடு நேற்று இரவு இரண்டு குழந்தைகளோடு படுத்து உறங்கி உள்ளார்.
கண் விழித்துப் பார்க்கும் போது ரஜிதாவை காணவில்லை என்று சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் துறையிடம் மர்ஜினா புகார் அளித்துள்ளார். விசாரணையில் மூன்றாவது கணவன் அமீதுக்கும் அவரது நண்பருக்கும் ஏற்பட்ட தகராறில் ரஜிதாவை தூக்கி சென்றதாகவும் புகார் கொடுத்தார். இதையடுத்து அமீது மற்றும் அவரது நண்பரை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications