சென்னை விமான நிலையத்தில் தொழில் நுட்ப கோளாறு.. தவித்த பயணிகள்.. தாமதமாக கிளம்பிய விமானங்கள்
சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. இதன்காரணமாக பாங்காக், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண அட்டை, உடமைகள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்படைந்ததால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதளம் இயங்காததால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.

ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் . துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டது. இதன்காரணமாக பாங்காக், கொழும்பு, துபாய், பாரிஸ் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண அட்டை, உடமைகள் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு 187 பயணிகளுடன் காலை 8 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் விமானி வராத காரணத்தால் இரண்டரை மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட நேர்ந்தது. பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட்டு விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்தனர். குவைத்தில் இருந்து வந்த விமானத்தை இயக்கி வந்த விமானி ஓய்வுக்கு சென்று விட்டார்.
விமானத்தை இயக்க வேண்டிய தலைமை விமானி சென்னை விமான நிலையத்துக்கு வரவில்லை. இதனால் குவைத் விமானத்தில் பயணிகள் ஏற்றப்படாமல் அமர வைக்கப்பட்டனர். விமானி காலதாமதமாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். இதனால் இரண்டரை மணிநேரம் தாமதமாக அந்த விமானம் குவைத்துக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications