நள்ளிரவில் அலறிய சென்னை.. கல்லூரி மாணவரை சுற்றி வளைத்து வெட்டிய கும்பல்.. 5 பேர் கைது..!
கல்லூரி மாணவர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் 5 பேர் கைதாகி உள்ளனர்
சென்னை: பிரசாந்துக்கு 22 வயசுதான்.. 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று மொத்தமாக சூழ்ந்து கொண்டு, பிரசாந்த்தை வெட்டி சாய்த்துள்ளது... முன்விரோதத்தினால் நடந்த இந்த கொலையானது சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 22 வயசு பிரசாந்த், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் காலேஜில் பிஏ 2-ம் வருடம் படித்து வந்துள்ளார்.. ஆனால் இவர் மீது கொடுங்கையூர் ஸ்டேஷனில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளதாம். இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் சொல்கிறார்கள்.

இவரது அம்மா மீன் வியாபாரம் செய்து வருகிறார்.. விடிகாலையில் காசிமேட்டுக்கு மீன் வாங்க செல்வது வழக்கம்.. இதற்காக நள்ளிரவே வீட்டை விட்டு கிளம்பிவிடுவாராம்.. இவரது அம்மாவுடன் அம்சா என்பவரும் மீன் வாங்க செல்வார்.. அவர் வீடு சற்று தொலைவில் உள்ளதால், அழைத்து வருவதற்காக பைக் எடுத்து கொண்டு சென்றார் பிரசாந்த்.
அப்போது, நள்ளிரவு நேரம் என்பதால், 7 பேர் கொண்ட கும்பல் பிரசாந்தை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தள்ளிவிட்டு தப்பிவிட்டது.. பிரசாந்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.. வியாசர்பாடி போலீசாருக்கும் தகவல் சொன்னார்கள்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரசாந்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் வழியிலேயே பிரசாந்த் உயிர் பிரிந்தது.. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. அந்த 7 பேரும் தலைமறைவாகி இருந்த நிலையில், வியாசர்பாடியைச் சேர்ந்த சந்துரு, பரத், சாக்ரடீஸ், சதாகர், சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications