22 வயதில் 6வது கர்ப்பம்.. கணவரின் விபரீத ஆசையால் உறைந்த டாக்டர்.. 4 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ
சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெறும் 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர், இப்போது 6வது முறையாக கர்ப்பமடைந்துள்ளாராம்.. இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதுகுறித்து அந்த பெண் சொன்ன தகவல்தான், அதற்கு மேல் வைரலாகி கொண்டிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் இந்த பெண்.. 22 வயதாகிறது.. இப்போது உத்தரப் பிரதேசத்தில் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு செக்கப்புக்காக சென்றுள்ளார்.

6வதாக கர்ப்பம் தரித்த 22 வயது பெண்
அவரை பரிசோதித்தபோதுதான், அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.. உடனே அப்பெண்ணின் விவரங்களை டாக்டர் கேட்டார்.. பிறகு வயது என்ன என்று கேட்டார்.. அதற்கு அந்த பெண் 22 வயது என்று சொன்னதுமே அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டார் டாக்டர்.. காரணம், இந்த பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருக்கிறதாம்..
டாக்டரிடம் செக்கப்புக்கு வந்தபோது இந்த பெண் பேசுவது வீடியோவாகவும் வெளியாகி உள்ளது.. அந்த வீடியோவில், "5 குழந்தைகள் இருக்கும்போது எதற்காக 6வது குழந்தை? என்று டாக்டர் கேட்கிறார்.
ஆண் குழந்தை வேண்டும் மேடம்
அதற்கு அப்பெண், "15 வயசிலேயே எனக்கு திருமணம் நடந்துவிட்டது.. வரிசையாக பெண் குழந்தைகள்தான் பிறந்தன.. ஒரே ஒரு ஆண் குழந்தை மட்டும்தான் உள்ளது.. என் கணவர் இன்னொரு ஆண் குழந்தையை விரும்புகிறார்.. எங்கள் குடும்பத்தினரும் ஆண் குழந்தை வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். அவர்களின் ஆசையை நிறைவேற்றவே நான் 6வது முறையாகக் கர்ப்பம் தரித்திருக்கிறேன்" என்று கேஷூவலாக சொல்கிறார்
இதைக்கேட்டதுமே கடுப்பான டாக்டர், அந்தப் பெண்ணை எச்சரிக்கிறார்.. இளம் வயதில் மீண்டும் மீண்டும் கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து டாக்டர், தம்பதியினரை அறிவுறுத்துகிறார்..
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, இதுவரை கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. அத்துடன் முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டுள்ளது.
டாக்டர்கள் சொல்வதென்ன
ஒரு பிரசவத்திற்குப் பிறகு, தாயின் உடல் பழைய நிலைக்குத் திரும்புவதற்கும், இழந்த சத்துக்களைப் பெறுவதற்கும் குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் வரை இடைவெளி இருப்பது மிகவும் அவசியம் என்று மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இங்கு மீட்புக் காலத்திற்கான எந்தவொரு அவகாசமும் இல்லாமல், தொடர்ச்சியான கர்ப்பங்களால் அந்தப் பெண்ணின் உடல் மிகவும் பலவீனமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து கர்ப்பமாவதால் ஏற்படும் கடுமையான உடல்நல அபாயங்கள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்தாவாறே உள்ளனர்.. ஒரு பிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல் இழந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் பெற்று பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் இடைவெளி அவசியம்.. இந்த அவகாசம் இல்லாதபோது தாய்க்கு கடுமையான ரத்த சோகை ஏற்பட்டு உடல் முற்றிலும் பலவீனமடையும் என்றும் டாக்டர்கள் சொல்கிறார்கள்.
உயிரோடு விளையாட்டு
அதுமட்டுமல்ல, போதிய இடைவெளி இல்லாத தொடர் கர்ப்பங்கள் பிரசவ கால சிக்கல்களை அதிகரித்து, குறைப்பிரசவம் ஏற்படுவதற்கும் அல்லது பிறக்கும் குழந்தை மிகக் குறைந்த எடையுடன் பிறப்பதற்கும் வழிவகுக்கும் என மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. அப்படியிருந்தும்கூட சில பெண்கள் இளம் வயதிலேயே, அதிக குழந்தைகளை தொடர்ச்சியாக பிரசவிப்பது நடப்பது வேதனையை தருகிறது.
அதிலும் 21ஆம் நூற்றாண்டிலும் ஆண் வாரிசு மோகத்திற்காக ஒரு பெண்ணின் உயிரோடு விளையாடும் இத்தகைய சம்பவங்கள் வட மாநிலங்களில் தொடர்ந்து அரங்கேறி வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு குறித்த கேள்விகளை இந்தச் சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது...!!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications