தமிழ்நாட்டை புயல் தாக்குமா? 26 மாவட்டங்களில் இன்று கனமழை.. வானிலை மைய ரிப்போர்ட் என்ன சொல்கிறது?
சென்னை: தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 1 வாரமாக கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் மழை நேரத்திற்கு பின் தினமும் 1-2 மணி நேரம் கனமழை பெய்து வருகிறது.
அதேபோல் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களிலும் மாலை நேரத்திற்கு பின் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு மழை
தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு இல்லை: ஆனாலும் இன்று மழை பெய்யும். இன்று சென்னையிலும் கனமழைக்கு ஓரிரு இடங்களில் வாய்ப்பு உள்ளது. மாலைக்கு பின் சென்னையில் மழை பெய்யும். காலை ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

வேறு எங்கு
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் காலையில் இருந்து கனமழை பெய்யும். சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகலுக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், கடலூர் மாலையில் இருந்து கனமழை பெய்யலாம். இங்கே காலையில் இருந்து மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற மாவட்டங்கள்
கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்று உள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இது வரும் 22ம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

வங்கக்கடல்
பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24ம் தேதி புயலாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு 25 ஆம் தேதிவாக்கில் இது நகர தொடங்கும். புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு நேரடி பாதிப்பு இல்லை. இந்த புயல் மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கடற்கரை நோக்கி நகரக்கூடும். இருப்பினும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.












Click it and Unblock the Notifications