Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய தமிழர்.. பனி, குளிரை வென்று சாதித்த கோவளம் இளைஞர்.. யார் இந்த ராஜசேகர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை கோவளத்தைச் சேர்ந்த ராஜசேகர் பச்சை என்ற 27 வயது இளைஞர், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய இரண்டாவது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ராஜசேகர்.

தமிழ்நாடு கோவளம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான ராஜசேகர் பச்சை, நேற்று மே 19 ஆம் தேதி அதிகாலை சுமார் 5-30 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, பேஸ்கேம்ப்க்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

27 old youth Rajasekar the first person from Tamil nadu reaches mount everest

தமிழ்நாட்டின் சென்னையை ஒட்டியுள்ள மீனவ கடற்கரை கிராமமான கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர். அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் ராஜசேகர். அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்து வந்த ராஜசேகருக்கு திடீரென மலையேற்றத்தில் ஆர்வம் ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக அதற்குரிய பயிற்சிகளைத் தொடங்கி, தொடர்ந்து மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைப் பெற்றார். ஒரு வருட காலமாக மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். 6 மலை உச்சிகளில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் கனவை நோக்கி நடை போட்டார்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது கடுமையான பனி குளிரைத் தாங்கவேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும் மனதையும், குளிருக்குத் தயார் செய்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு உறுதியோடு தயாரானார்.

27 old youth Rajasekar the first person from Tamil nadu reaches mount everest

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் பயணத்தைத் தொடங்கி 8,850 மீட்டர் உயரத்தை நேற்று (மே 19) அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். எவரெஸ்ட் உச்சியைத் தொடும் தனது கனவை நிஜமாக்கியுள்ளார் தமிழரான ராஜசேகர்.

27 old youth Rajasekar the first person from Tamil nadu reaches mount everest

ஒரு மாதத்திற்கும் மேலான கொடுமையான பயண அனுபவத்தில் ஏகப்பட்ட சோதனைகள், தடைகளைக் கடந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார் ராஜசேகர். எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து, பேஸ்கேம்ப்க்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளார் ராஜசேகர்.

தமிழ்நாட்டில் இருந்து இரண்டாவது நபராக எவரெஸ்ட் உச்சியை எட்டியிருப்பவர் ராஜசேகர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ஆம் ஆண்டு ஊட்டியை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழர் என்ற சாதனையை படைத்தார்.

27 old youth Rajasekar the first person from Tamil nadu reaches mount everest

கனவைத் துரத்தி, அதற்காக கடுமையாக உழைத்து, எவரெஸ்ட் சிகரத்தை எட்டியிருக்கும் ராஜசேகர், சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் உந்து சக்தியாக உருவாகியிருக்கிறார். எவரெஸ்ட் சிகரத்தை எட்டியிருக்கும் சாதனைத் தமிழர் ராஜசேகர் நம் தமிழ்நாட்டுக்கே பெருமை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+