‛‛குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் பைன் போடனும்’’.. போலீசை தாக்கிய பெண்.. மொத்தமாக சிக்கிய கும்பல்
சென்னை: சென்னையில் சூளைமேடு பகுதியில் குடிபோதையில் வாகனத்துடன் வந்தவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் ஒருவர் தனது கணவருக்கு ஆதரவாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார். இதில் இளம்பெண் மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மதுபானம் குடித்து வாகனம் ஓட்டக்கூடாது என போலீசார் அறிவுரைகளை வழங்கினாலும் கூட பலரும் அதனை பின்பற்றுவது இல்லை. இவ்வாறு விதிகளை மீறுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை சூளைமேடு பகுதியில் போலீசார் இரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்தார். சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருவரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பிரீத் அனலைசர் மூலம் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சத்யராஜ், தனது மனைவி அக்சயாவை செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வரவழைத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அக்சயா வந்தார். அவர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் மட்டுமே பைன் போட வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் பைன் போடக்கூடாது. எங்கே உங்களது ரூல்ஸ் புக் என கேள்வி எழுப்பினார். மேலும் போலீஸ்னாலே பிராடு தானே என அவர் விமர்சனம் செய்ததோடு, எம்பி, எம்எல்ஏ யாரை கூப்பிட வேண்டும்? என சீறினார்.

மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அக்சயா, போலீஸ்காரர் ஒருவரையும் தாக்கினார். மேலும் அங்கிருந்த பொருட்களை போலீஸ் மீது தூக்கி வீசி தாக்கினார். இதில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜ், அவரது மனைவி அக்சயா மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்தனர்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications