‛‛குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் பைன் போடனும்’’.. போலீசை தாக்கிய பெண்.. மொத்தமாக சிக்கிய கும்பல்
சென்னை: சென்னையில் சூளைமேடு பகுதியில் குடிபோதையில் வாகனத்துடன் வந்தவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பெண் ஒருவர் தனது கணவருக்கு ஆதரவாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினார். இதில் இளம்பெண் மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மதுபானம் குடித்து வாகனம் ஓட்டக்கூடாது என போலீசார் அறிவுரைகளை வழங்கினாலும் கூட பலரும் அதனை பின்பற்றுவது இல்லை. இவ்வாறு விதிகளை மீறுவோரை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை சூளைமேடு பகுதியில் போலீசார் இரவில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் நேற்று இரவு தனது நண்பர் வினோத்துடன் மது அருந்திவிட்டு வந்தார். சூளைமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், இருவரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரும் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பிரீத் அனலைசர் மூலம் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தனர். அதற்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சத்யராஜ், தனது மனைவி அக்சயாவை செல்போனில் தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு வரவழைத்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அக்சயா வந்தார். அவர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் மட்டுமே பைன் போட வேண்டும். வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் பைன் போடக்கூடாது. எங்கே உங்களது ரூல்ஸ் புக் என கேள்வி எழுப்பினார். மேலும் போலீஸ்னாலே பிராடு தானே என அவர் விமர்சனம் செய்ததோடு, எம்பி, எம்எல்ஏ யாரை கூப்பிட வேண்டும்? என சீறினார்.

மேலும் கோபத்தின் உச்சிக்கு சென்ற அக்சயா, போலீஸ்காரர் ஒருவரையும் தாக்கினார். மேலும் அங்கிருந்த பொருட்களை போலீஸ் மீது தூக்கி வீசி தாக்கினார். இதில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யராஜ், அவரது மனைவி அக்சயா மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்தனர்.
-
Chennai Rain: அடுத்த 2 மணி நேரம்.. சென்னையில் பிச்சு உதறப்போகுது மழை.. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்! -
அன்புமணிக்கு டபுள் ஷாக்? வன்னியர் வாக்குகளில் பிளவு.. யாருக்கு லாபம்? பாமகவில் திருப்பம் -
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம் -
எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி -
சென்னை தலைமைச் செயலகத்தை அதிரவைத்த காவலர் கோதண்டபாணி.. என்ன நடந்தது? -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
விஜய்யுடன் ரகசிய டீலா? பாஜக கூட்டணி பகீர் பேச்சு.. “பூனைக்குட்டி வந்துருச்சோ?” கோவையில் பரபரப்பு -
39 நாளில் டேவிட்சன் மாற்றம்! புதிய டிஜிபியான சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்! சந்தீப் மிட்டல் யார்? -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்!











Click it and Unblock the Notifications