"வாரிசு அரசியல்.." துரை வைகோவை எதிர்த்த.. மதிமுக 3 மாவட்ட செயலாளர்கள் சஸ்பெண்ட்.. வைகோ அதிரடி
சென்னை : கடந்த நில நாட்களுக்கு முன்னர் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைத்துவிடலாம் எனவும், வைகோவின் மகனான துரை வைகோவுக்கு பதவி அளிக்கப்பட்டதற்கு எதிராக பேசிய சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர் மாவட்டச் செயலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மதிமுக செயலாளர் செங்குட்டுவன் மற்றும் விருதுநகர் செயலாளர் சண்முக சுந்தரம் உட்பட பல மூத்த நிர்வாகிகள் கடந்த மார்ச் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, மதிமுகவில் நடைபெறவுள்ள உட்கட்சி தேர்தல், கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை என்று, கட்சியின் தலைமை பொறுப்பை துரை வைகோவுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகாரை கிளப்பினர்.

மதிமுக துரை வைகோ
மேலும் அதிரடி நடவடிக்கையாக கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருத்தினர். இதனால் மதிமுகவுக்குள் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், துரை வைகோவுக்கு எதிராக திடீர் கூட்டணி சொந்த கட்சியிலேயே உருவான நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மவுனம் காத்து வந்தார். ஆனால் சொந்த கட்சியினரை பகைத்துக் கொள்ள விரும்பாத அதே நேரத்தில் கட்சியில் மகனுக்கு முக்கியத்துவத்தையும் அதிகரித்தார்.

மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி
கடந்த சில நாட்களுக்கு முன்னர் துரை வைகோ மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சில மூத்த நிர்வாகிகள் அவர் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வாரிசு அரசியலை எதிர்த்து தொடங்கப்பட்ட மதிமுகவின் வாரிசு அரசியலா என அவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கட்சியின் பொதுக்குழுவிலும் இதுகுறித்து காரசார விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

வைகோவுக்கு கண்டனம்
இதன் தொடர்ச்சியாக அந்த பொதுக்குழுவில் கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை எடுக்க வைகோவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதில்" மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் தீங்கு இழைப்பவர்கள் மீது, கழக சட்டதிட்ட விதிகளின்படி பொதுச்செயலாளருக்கு உள்ள அதிகாரத்தைச் செயற்படுத்தி, உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

கட்சியிலிருந்து இடை நீக்கம்
இந்த சூழலில், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மதிமுக செயலாளர் செங்குட்டுவன் மற்றும் விருதுநகர் செயலாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது மதிமுக வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த நீக்கத்தின் பின்னணியில் துரை வைகோதான் முழுமையாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் வாரிசு அரசியலை எதிர்த்தார்கள் என்பதற்காக, வாரிசு அரசியலை எதிர்த்து தனிக் கட்சி கண்ட வைகோவாலேயே நீக்கப்பட்டுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications