ஆயுத பூஜை, தொடர் விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்.. எத்தனை பேர் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்ததாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பதை போல் அதன் தலைநகரும் தொழிலுக்காக படிப்புக்காக வந்தவர்களை வாழ வைக்கிறது. சென்னையில் வேலைத் தேடியும் படிப்புக்காகவும் பலர் தங்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னைக்கு வருகிறார்கள்.

 3 lakhs were gone to native places for Ayudha Pooja

இவர்கள் சென்னையில் தங்கி தங்கள் அலுவல்களை பார்க்கிறார்கள். முக்கிய பண்டிகைகள், விசேஷ நாட்கள், தொடர் விடுமுறைகள் என வந்தால் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இவர்கள் ரயில்கள், பேருந்துகள், கார்கள், டூவீலர்கள், மூலம் தங்கள் ஊரை சென்றடைகிறார்கள்.

அந்த வகையில் இந்த முறை ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையில் வருகிறது. அதாவது சனி, ஞாயிறு ஏற்கெனவே விடுமுறை என்ற நிலையில் திங்கள்கிழமை ஆயுதபூஜையும், செவ்வாய்க்கிழமை விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு 4 நாட்களுக்கு தொடர் விடுமுறையாகும்.

இந்த விடுமுறையையொட்டி பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதலே படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில் சென்னையிலிருந்து கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் சொந்த ஊரின் தூரத்தை பொருத்து இரு சக்கர வாகனங்கள், கார்கள் மூலமும் நிறைய பேர் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இது இல்லாமல்ஸ கொடைக்கானல், ராமேஸ்வரம் உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் ஏராளமானோர் சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+