சென்னை டாக்டரின் நீலாங்கரை பங்களாவுக்குள் புகுந்து அழகியுடன் உல்லாசம்.. 3 பேர் சிக்கினர்
சென்னை: சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் கடலோர பங்களாவுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து பெண்ணுடன் ஒரு வாரமாக உல்லாசம் அனுபவித்து வந்த 3 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அந்தப் பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
டாக்டர் அமிர்தா பிர்லா என்பவருக்குச் சொந்தமான பங்களா, நீலாங்கரையில், கடலோரத்தில் அமைந்துள்ளது. இங்கு டாக்டர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
ஒரு வாரத்திற்கு முன்பு டாக்டர் வெளியூர் போயிருந்தார். போய் விட்டு திரும்பிய அவர் வீட்டின் கதவுப் பூட்டு உடைந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார். பதைபதைப்புடன் உள்ளே போன அவர் அங்குள்ள ஏசி அறை உள்பக்கமாக பூட்டியிருந்ததையும், உள்ளே ஆட்கள் சத்தம் கேட்டதையும் அறிந்து அதிர்ச்சியுற்றார்.
உடனடியாக அவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வ்நதனர். பங்களாவைச் சுற்றிலும் போலீஸார் நிறுத்தப்பட்டனர். பின்னர் ஏசி அறைக் கதவைத் தட்டினர்.
போலீஸார் வந்திருப்பதை அறிந்து உள்ளே இருந்தவர்கள் மெதுவாகக் கதவைத் திறந்தனர். இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் முதலில் வெளியே வந்தனர். பின்னர் போலீஸார் அறைக்குள் போய் சோதனை போட்டபோது கழிப்பறைக்குள் ஒரு ஆள் ஒளிந்திருந்ததைக் கண்டு அவனை வெளியே தூக்கி வந்தனர்.
நான்கு பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த ஆண்களின் பெயர் ராஜா, விஜய், மணிகண்டன் என்றும் நீலாங்கரையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்தது. அந்தப் பெண்ணுக்கு 17 வயதாகிறது.அவரும் நீலாங்கரையைச் சேர்ந்தவர்தான்.
இந்த 4 பேரும் டாக்டர் வெளியூர் போனதும் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அந்த ஏசி அறைக்குள், உள்ளேயிருந்து பூட்டியபடி உல்லாசமாக இருந்துள்ளனர். வீட்டில் இருந்த பிரிட்ஜில் மதுவை வாங்கி வைத்துக் கொண்டு இஷ்டத்திற்குக் குடித்து விட்டு கூத்தடித்துள்ளனர்.
கையில் காசு தீர்ந்ததும் பாத்ரூமில் இருந்த ஷவர் குழாய்களை உடைத்து அதை விற்கவும் செய்துள்ளனர்.
லாட்ஜுக்குப் பெண்ணுடன் போய் இன்பமாக இருக்கலாம் என்றால் போலீஸ் தொல்லை இருப்பதால், இப்படி பங்களாவுக்குள் புகுந்து விட்டதாக அந்த ஆண்கள் மூன்று பேரும் கூறியுள்ளனர்.