நண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெரினா கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி மாயமாகினர்.

கடலில் மூழ்கிய 3 பேரில் மீட்கப்பட்ட தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கடலில் மூழ்கிய பரத், ஜெய்கீர்த்தி என்ற இரண்டு மாணவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 3 Students drowned in the Marina sea, one dies

மெரினாவில் கடலில் அலைகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி உள்ளது. போலீசார் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர். மேலும், குதிரைகளில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை சென்று திரும்புவதை வீர விளையாட்டாக கருதி, பல இளைஞர்கள், மாணவர்கள் அழமான பகுதிகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

அதே நேரம் ராட்சத அலைகளில் சிக்குபவர்கள் அதில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் மூச்சுத்திணறி உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.

இந்தநிலையில், விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மெரினா கடற்கரையில் மேலும் ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் பரத், ஜெய்கீர்த்தி, தினேஷ் ஆகியோர் நீரில் மூழ்கினர். அவர்களில், தினேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+