Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவலையே வேண்டாம்.. 3,412 சிறப்பு பேருந்துகள் இருக்கு! பொங்கல் லீவுக்கு போனவங்க இன்று திரும்பலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தமிழ்நாடு முழுவதும் இன்று 3,412 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 4,302 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முடிந்ததை தொடர்ந்து சொந்த ஊர்களுக்குச் சென்ற பெரும்பாலானோர் நேற்று முன் தினம் முதல் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளனர். இதை யொட்டி பயணிகளின் வசதிக்காக ஜனவரி 15 முதல் ஜனவரி 19-ம் தேதி வரை, சென்னைக்கு தினசரி இயங்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

pongal 2025 transport


அதற்கேற்ப அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முன்பதிவு செய்து நேற்று 28,022 பயணிகளும், இன்று 29,056 பயணிகளும் ஊர் திரும்பியுள்ளனர். அதேபோல் மொத்தம் 42,917 பயணிகள் சென்னை திரும்புவதற்காக நாளை முன்பதிவு செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக 19 ஆம் தேதி சென்னைக்கு திரும்பினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். எனவே, பொதுமக்கள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றி இன்று முதல் பயணத்தை மேற்கொள்ளுமாறும் போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதற்காக இன்று தமிழ்நாடு முழுவதும் 3,412 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை 4,302 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பேருந்துகளை பயன்படுத்தி, சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஊர் திரும்பலாம்.

இதற்கிடையே, பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, நாளை பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 20.01.2025 அன்று கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பேருந்துகள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 19.01.2025 அன்று பிற்பகல் முதல் 20.01.2025 வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம், செங்குன்றம், எழும்பூர் இரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் ஆகிய முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+