சென்னையில் மட்டும் 346 பேருக்கு கொரோனா- மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 46 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் சென்னையில் மட்டும் 346 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பிய 46 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 11,224 ஆக இருந்தது. இன்று சென்னையில் மட்டும் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விவரம்:
- செங்கல்பட்டு- 43
- அரியலூர் - 2
- கள்ளகுறிச்சி-5
- காஞ்சிபுரம்- 17;
- கன்னியாகுமரி- 7
- கரூர்-1
- மதுரை- 3
- ராணிப்பேட்டை- 2
- தேனி- 9
- திருப்பத்தூர்- 1
- திருவள்ளூர்- 19
- திருவண்ணாமலை-4
- தூத்துக்குடி -1
- விழுப்புரம்- 4
- விருதுநகர்- 3
சென்னை விமான நிலையம் தனிமைப்படுத்துதல் முகாமில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 536 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 11,760
இவர்கள் அல்லாமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர் மாவட்டங்களுக்கு மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.