தமிழகத்தில் 36,000-ஐ கடந்த கொரோனா.. ஒரே நாளில் 467 பேர் உயிரிழப்பு.. சென்னையில் பாதிப்பு குறைகிறது!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை.

36,000-ஐ கடந்த கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் 14 நாள்கள் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 36,000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உயிரிழப்பு ஜெட் வேகம்
இதனால் மொத்த பாதிப்பு 17,70,988 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 467 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 109 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 19,598 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 24,478 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 14,76,761 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர்?
2,74,629 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,65,953 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,54,19,598 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 5913 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது

கோவையில் ஆதிக்கம்
செங்கல்பட்டில் 2226 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக பாதிப்பு உள்ளது. கோவையில் மட்டும் 3243 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 1145 பேருக்கும், மதுரையில் 1355 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1251 பேருக்கும், திருவள்ளூரில் 1667 பேருக்கும், திருச்சியில் 1331 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications