வாங்கியது 30 ஆயிரம்.. வீட்டில் பல கோடி பணம் தங்கம்.. நாட்டையே ஆடிப்போக வைத்த அரசு ஊழியர்
புவனேஸ்வர்: அரசு ஊழியர்களின் வீடுகளில் மூட்டை மூட்டையாகவும், கட்டுக் கட்டாகவும் பணம் சிக்கிய அதிரடி சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருப்பதை நீங்கள் பல முறை கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்படி சார், இவ்வளவு பணத்தை வீட்டில் வைச்சிருக்கீங்க.. அதுவும் வெறும் 30 ஆயிரம், 40 ஆயிரம் வாங்கி இவ்வளவு சொத்து சேர்க்க முடியும் என நீங்களே கேட்டிருப்பீர்கள்.. அப்படியான சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. வெறும் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஒரு அரசு ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். அவரது வீட்டில் 4 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அண்மையில் ஒடிசா ஊழல் தடுப்புப் பிரிவு ₹30,000 லஞ்சம் வாங்கியதாக கட்டாக் வட்டாரச் சுரங்கத் துறை இணை இயக்குனர் தேபப்ரதா மொஹந்தியை கைது செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் புவனேசுவரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ₹4 கோடிக்கும் அதிகமான ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா ஊழல் தடுப்புப் பிரிவின் வரலாற்றிலேயே ஒரு சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்சத் தொகை இதுதான்.

இதுதவிர கட்டாக் வட்டாரச் சுரங்கத் துறை இணை இயக்குநர் தேபப்ரதா மொஹந்தியின் அலுவலக மேஜை டிராயரில் இருந்து ₹1.20 லட்சம் கண்டெடுக்கப்பட்டது. புவனேசுவரில் உள்ள இரண்டு அடுக்கு கட்டிடம் மற்றும் சுமார் 130 கிராம் தங்கம் உள்ளிட்ட பிற சொத்துக்களும் கண்டறியப்பட்டிருக்கிறது. தற்போது சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அரியானா
ஒடிசாவை போல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வுகள் இதற்கு முன்பு நடந்துள்ளது. அந்த வகையில் 2025ம் ஆணடு ஊழல் தடுப்புப் பிரிவு வரலாற்றில் மிகப்பெரிய வேட்டை நடந்திருக்கிறது. அரியானா மாநில ஊழல் தடுப்புப் பிரிவு , ஒரு அரசு அதிகாரியின் வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் ₹5 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் கிலோ கணக்கில் தங்கத்தை மீட்டது. இந்த அதிகாரி ஒரு டெண்டர் விடுவிப்புக்காக லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.
ஜார்கண்ட்: அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ₹35 கோடி
முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரான விவேக் சந்திரா என்பவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. அப்போது அவரது வீட்டுப் பணியாளரின் அறையில் இருந்து மட்டும் ₹32 கோடியிலிருந்து ₹35 கோடி வரை ரொக்கப் பணம் கட்டுக் கட்டாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்தை எண்ணுவதற்கே பல இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இது ஜார்க்கண்ட் மாநிலத்தை தாண்டி இந்தியாவையே உலுக்கியது.
கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் ₹8 கோடி
கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்தின் (KSDL) தலைவராக இருந்த பாஜக எம்.எல்.ஏ மாடல் விருபாக்ஷப்பாவின் மகன் பிரசாந்த் மாடல், ₹40 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ₹8.12 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து உறுதியானது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேற்கு வங்காளம்: கல்வித்துறை ஊழல் - ₹50 கோடி
இதேபோல் கடந்த 2022ம் ஆண்டு மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய தோழி அர்பிதா முகர்ஜியின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இரண்டு வெவ்வேறு வீடுகளில் இருந்து மொத்தம் ₹50 கோடி ரொக்கம் மற்றும் ₹5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பணமலை போலக் குவிந்து கிடந்த படங்கள் அப்போது வைரலானது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications