கூவத்தூர் அருகே இரு பேருந்துகள் மோதி 4 பேர் பலி.. 6 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே இரு பேருந்துகள் மோதி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது நிலைத்தடுமாறிய அந்த பேருந்து எதிர் திசையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது.

4 were died in a road accident near Kalpakkam

இதில் அரசு பேருந்தின் வலது புறத்தில் உள்ள இருக்கைகள் முழுவதும் சேதமடைந்தன. இந்த விபத்தில் இரு பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

விபத்தில் காயமடைந்த 6 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து கல்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+