லெக்கின்ஸ் பேண்ட்.. குதிரை வால் கொண்டை.. அசோக்குமார் மனைவி காமாட்சி செய்த வேலை இருக்கே.. அய்யய்ய
சென்னை: ஆள் பார்க்க படித்த, பேஷன் விஷயங்களில் கரைத்துக் குடித்த பெண் மாதிரி இருக்கிறார். டைட்டான லெக்கின்ஸ், அதுவும் முழங்காலுக்கு சற்று மேலே வரைதான் இருக்கிறது. குதிரை வால் கொண்டை போட்டிருக்கிறார். இவர் பெயர் காமாட்சி.
இவரது கணவர், அசோக்குமார், அவர்களின் கூட்டாளி ராஜவேல், அபிஷேக் பால் ஆகியோரும் பார்க்க செம புரபஷனலாக காட்சியளிக்கிறார்கள்.
ஆனால், இவர்கள் அனைவரும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரு கும்பல் என்று சொன்னால் பார்ப்பவர்களால் நம்பவே முடியாது.

போலி கால் சென்டர்
ஆம்.. லேசுப்பட்ட மோசடி இல்லை. வித்தியாசமான மோசடியை அரங்கேற்றியுள்ளது இந்த கும்பல். அசோக்குமார்,அவரது மனைவி காமாட்சி, ராஜவேல்,மற்றும் அபிஷேக் பால் ஆகிய நான்கு பேரும் போலியாக ஒரு கால் சென்டரையே உருவாக்கி நடத்தி வந்துள்ளதை கண்டுபிடித்துள்ளது சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை.

பைனான்ஸ் கம்பெனிகள் பெயர்
இவர்களிடம் 8 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கும்பல் பஜாஜ் பைனான்ஸ், வரலட்சுமி பைனான்ஸ் மற்றும் தமிழர் ஃபைனான்ஸ், போன்ற வெவ்வேறு பெயர்களில் மக்களை தொடர்புகொண்டு லோன் பெற்று தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளது.

லோன் மோசடி
கடந்த ஜூன் மாதம் 2020ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை சேர்ந்த கனகலட்சுமி என்பவர் லோன் வாங்கி தருவதாக கூறி ரூபாய் 82 ஆயிரம் பணத்தை வங்கி கணக்கில் இருந்து பெற்று தன்னை ஒரு கும்பல் ஏமாற்றியதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் விசாரணையை ஆரம்பித்த காவல்துறை, அப்படியே நூல் பிடித்துச் சென்று இந்த கும்பலை கைது செய்துள்ளது.

மக்களே உஷார்
இந்த மோசடிக் கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மக்களே.. யாராவது லோன் தரும் கம்பெனியிலிருந்து பேசுகிறோம் எனக் கூறி லோன் தருவதாக கூறி, பணம் கேட்டால், அவர்கள் திசையை பார்த்து பெரிய கும்பிடு போட்டுவிடுங்கள். பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.












Click it and Unblock the Notifications