Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 பேராசிரியர்கள் டிஸ்மிஸ்.. எழுத்துபூர்வமாக அறிக்கை தர கேட்ட மாணவிகள்.. ஒப்புக் கொண்ட கலாஷேசத்ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஹரி பத்மன் உள்பட 4 பேராசிரியர்களை டிஸ்மிஸ் செய்வதாக மாணவிகளிடம் வாய்மொழியாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் எழுத்துப்பூர்வமாக அளிக்க கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு கல்லூரி நிர்வாகமும் ஒப்புக் கொண்டது.

சென்னை அடையாறில் உள்ளது கலாஷேத்ரா பவுண்டேஷன். இங்கு பரத கலையையும் இசையையும் வளர்க்கும் விதமாக 1936 ஆம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேலினால் தொடங்கப்பட்ட ஒரு கல்லூரியாகும்.

இங்கு உலகெங்கும் மாணவிகள் வந்து தங்கி பயில்கிறார்கள். இது பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பரதம் பயின்று வருகிறார்கள்.

உதவி பேராசிரியர்

உதவி பேராசிரியர்

இந்த நிலையில் உதவி பேரசிரியர்களாக ஹரி பத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் கூறிய போதிலும் அவர்கள் யாரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வெகுண்ட மாணவிகள்

வெகுண்ட மாணவிகள்

இதனால் வெகுண்டெழுந்த மாணவிகள் கலாஷேத்ரா கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

விசாரணை

விசாரணை

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி விசாரணை நடத்தியுள்ளார். அவரிடம் மாணவிகள் தனித்தனியாக வந்து பாலியல் சீண்டல்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து மாணவிகளிடம் இருந்து புகார்களும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டன. புகாருக்குள்ளானவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தால் கல்லூரிக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தலைமறைவு

தலைமறைவு

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். மேலும் மற்ற 3 பேராசிரியர்களை கல்லூரிக்குள் விடக் கூடாது என மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கூறியுள்ளார். இந்த நிலையில் வரும் 5 ஆம் தேதி முதல் கலாஷேத்ரா மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுமுறை

விடுமுறை

வரும் ஏப்ரல் 6 வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான கால அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி கல்லூரிக்குள் செல்ல மாட்டோம் என கலாஷேத்ரா மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கல்லூரிக்குள் வர முடியாது

கல்லூரிக்குள் வர முடியாது

இதுகுறித்து அவர் கூறுகையில் பாலியல் புகாருக்குள்ளானவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது கல்லூரிக்குள் ஏப்ரல் 5 ஆம் தேதி திரும்ப முடியாது. எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எப்படி கல்லூரிக்குள் செல்ல முடியும் என மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பேராசிரியர்கள் டிஸ்மிஸ்

பேராசிரியர்கள் டிஸ்மிஸ்

இந்த நிலையில் தலைமறைவாக இருந்து கைதான ஹரி பத்மன் உள்பட 4 பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரியின் மன நல ஆலோசகரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதிமொழி கூறப்பட்டுள்ளது. அவர்களது டிஸ்மிஸ் குறித்து கல்லூரி நிர்வாகம் வாய்மொழியாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எழுத்துப்பூர்வமாக நடவடிக்கைகள் தேவை என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறுதியில் பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+