4 பேராசிரியர்கள் டிஸ்மிஸ்.. எழுத்துபூர்வமாக அறிக்கை தர கேட்ட மாணவிகள்.. ஒப்புக் கொண்ட கலாஷேசத்ரா
சென்னை: கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் ஹரி பத்மன் உள்பட 4 பேராசிரியர்களை டிஸ்மிஸ் செய்வதாக மாணவிகளிடம் வாய்மொழியாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் எழுத்துப்பூர்வமாக அளிக்க கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு கல்லூரி நிர்வாகமும் ஒப்புக் கொண்டது.
சென்னை அடையாறில் உள்ளது கலாஷேத்ரா பவுண்டேஷன். இங்கு பரத கலையையும் இசையையும் வளர்க்கும் விதமாக 1936 ஆம் ஆண்டு ருக்மிணி தேவி அருண்டேலினால் தொடங்கப்பட்ட ஒரு கல்லூரியாகும்.
இங்கு உலகெங்கும் மாணவிகள் வந்து தங்கி பயில்கிறார்கள். இது பிரம்மஞான சபையின் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் பரதம் பயின்று வருகிறார்கள்.

உதவி பேராசிரியர்
இந்த நிலையில் உதவி பேரசிரியர்களாக ஹரி பத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர். இவர்கள் 4 பேரும் அங்குள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் கூறிய போதிலும் அவர்கள் யாரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

வெகுண்ட மாணவிகள்
இதனால் வெகுண்டெழுந்த மாணவிகள் கலாஷேத்ரா கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

விசாரணை
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி விசாரணை நடத்தியுள்ளார். அவரிடம் மாணவிகள் தனித்தனியாக வந்து பாலியல் சீண்டல்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து மாணவிகளிடம் இருந்து புகார்களும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டன. புகாருக்குள்ளானவர்களை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் போராட்டத்தால் கல்லூரிக்கு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தலைமறைவு
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உதவி பேராசிரியர் ஹரி பத்மன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். மேலும் மற்ற 3 பேராசிரியர்களை கல்லூரிக்குள் விடக் கூடாது என மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி கூறியுள்ளார். இந்த நிலையில் வரும் 5 ஆம் தேதி முதல் கலாஷேத்ரா மாணவிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுமுறை
வரும் ஏப்ரல் 6 வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்த நிலையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான கால அட்டவணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி கல்லூரிக்குள் செல்ல மாட்டோம் என கலாஷேத்ரா மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கல்லூரிக்குள் வர முடியாது
இதுகுறித்து அவர் கூறுகையில் பாலியல் புகாருக்குள்ளானவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது கல்லூரிக்குள் ஏப்ரல் 5 ஆம் தேதி திரும்ப முடியாது. எங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எப்படி கல்லூரிக்குள் செல்ல முடியும் என மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பேராசிரியர்கள் டிஸ்மிஸ்
இந்த நிலையில் தலைமறைவாக இருந்து கைதான ஹரி பத்மன் உள்பட 4 பேராசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கல்லூரியின் மன நல ஆலோசகரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதிமொழி கூறப்பட்டுள்ளது. அவர்களது டிஸ்மிஸ் குறித்து கல்லூரி நிர்வாகம் வாய்மொழியாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எழுத்துப்பூர்வமாக நடவடிக்கைகள் தேவை என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவிகளுடன் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறுதியில் பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications