சென்னையில் இன்று ஒரே நாளில் 4,086 பேருக்கு கொரோனா!.. 3667 பேர் டிஸ்சார்ஜ்!
சென்னை: சென்னையில் 4086 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 3667 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு தற்போது பல்கி பெருகி வருகிறது.

இந்த நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 4086 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 3667 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். சென்னை இன்று ஒரே நாளில் 25 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதன் மூலம் சென்னையில் 4,538 பேர் இதுவரை பலியாகிவிட்டனர்.
அரியலூரில் இன்று ஒரே நாளில் 33 பேருக்கும் செங்கல்பட்டில் 1163 பேருக்கும் சென்னையில் 4086 பேருக்கும் கோவையில் 1004 பேருக்கும் கடலூரில் 205 பேருக்கும் தருமபுரியில் 182 பேருக்கும், திண்டுக்கல்லில் 269 பேருக்கும் ஈரோட்டில் 392 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் 454 பேருக்கும் கன்னியாகுமரியில் 224 பேருக்கும் திருவள்ளூரில் 793 பேருக்கும் திருவண்ணாமலையில் 377 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் இதுவரை அரியலூரில் 5311 பேருக்கும் செங்கல்பட்டில் 72706 பேருக்கும் கோவையில் 72174 பேருக்கும் சென்னையில் 305570 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications