சென்னையில் நாளை முதல் புத்தக கண்காட்சி- முதல்வர் எடப்பாடி தொடங்கி வைக்கிறார்!
சென்னை: சென்னையில் 43-வது புத்தக கண்காட்சி நாளை தொடங்குகிறது. வரும் 21-ந் தேதி வரை இப்புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 43-வது புத்தக கண்காட்சி நாளை முதல் தொடங்குகிறது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு இப்புத்தக கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் பதிப்பகம், நூல் விற்பனை துறையில் சிறந்து விளங்குவோர், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.
ஒடிஷா சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், திருவள்ளுவரின் மணற் சிற்பத்தை வடிவமைக்க உள்ளார். மேலும் கீழடி- ஈரடி என்ற தலைப்பில் அரங்கம் ஒன்றும் தொல்லியல் துறை ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் முற்றம் என்ற நிகழ்ச்சியில் 25 எழுத்தாளர்கள் தங்களது படைப்புகளை அறிமுகம் செய்வர். இப்புத்தக கண்காட்சிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புத்தக கண்காட்சியின் நிறைவு நாளில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications