தொடர்ந்து குறையும் கொரோனா... தமிழ்நாட்டில் இன்று 457 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 457 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,46,937ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழ்நாட்டில் புதிதாக 457 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,46,937ஆக உயர்ந்துள்ளது.

457 people tested positive and 6 more died for Coronavirus today in Tamilnadu

தொடர்ந்து 51ஆவது நாளாக இன்றும் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் ஆறு பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 4,173 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 470 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தமிழ்நாட்டில் 51,101 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் தற்போது வரை 1,69,67,271 பேருக்கு கொரோனா கண்டறியும் சோதனை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் சென்னையில் தொடர்ந்து 96வது நாளாக இன்றும் 500-க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல சிகிச்சை பலனிற்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+