2ம் அலை அச்சம்.. இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. மகாராஷ்டிரா மோசம்.. இன்றைய நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,149,324 பேர் குணமாகி உள்ளனர்.நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 213பேர் பலியாகி உள்ளனர்.அங்கு மொத்தம் 11,645,719 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 160,003 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். முக்கியமாக இந்தியாவில் மஹாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில்தான் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்திலேயே இதற்கு முன் மகாராஷ்ராவில் இவ்வளவு கேஸ்கள் பதிவானது இல்லை. அங்கு மொத்தம் 24,79,682 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 22,14,867 பேர் குணமடைந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் இதுவரை 53399 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.அங்கு இரண்டாம் அலைக்கான அச்சம் ஏற்பட்டுள்ளது.

கேரளா

கேரளா

கேரளாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 11,04,229 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 10,74,805 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை 4496 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரில்தான் தினமும் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு மொத்தம் 9,70,202 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 9,44,256 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் இதுவரை 12434 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,66,982 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,46,480 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12599 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசம்

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 368 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 8,93,734
பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அங்கு மொத்தம் 8,84,357 பேர் குணமடைந்துள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இதுவரை 7189 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+