உயிர்பெற்று வரும் 48 ஆயிரம் வருட பழைய "உயிரினம்".. ஐஸுக்குள் இருந்து எழுந்து வரும் "ஸோம்பி".. ஷாக்
சென்னை: சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 46 ஆயிரம் ஆண்டுகள் பழைய வட்டப்புழுவை உயிர்ப்பிக்கும் ஆராய்ச்சியில் ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதம்.. சர்வாதிகாரம்.. வேலையின்மை.. வறுமை ஆகியவை உலகின் மிகப்பெரிய பிரச்சனைகளாக தோன்றினாலும், அதை விட பெரிய பிரச்சனை ஒன்றை நாம் சத்தமின்றி எதிர்கொண்டு வருகிறோம். அதுதான் காலநிலை மாற்றம்! உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது.

உலகம் முழுக்க காலநிலை மாற்றம் காரணமாக ஐஸ் கட்டிகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் வேகமாக உயரும்.இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம். இதெல்லாம் எல்லோரும் எதிர்பார்த்த, எதிர்பார்க்கும் அபாயங்கள் என்றாலும், வேறு சில அபாயங்களும் உள்ளன.
அதுதான் வைரஸ்கள் வெளியேறுவது! அதாவது ஐஸ் கட்டிகளுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாக உறங்கிக்கொண்டு இருக்கும் வைரஸ்கள், இந்த ஐஸ் கட்டிகள் உருகுவதால் வெளியேறும் அபாயம் உள்ளது. நமக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத, மருத்துவர்கள் இதற்கு முன் கேள்வி கூட படாத வைரஸ்கள் இதன் மூலம் தோன்றும் அபாயம் உள்ளதாக வைரலாஜி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகிறார்கள்.
முக்கியமாக ரஷ்யாவில் ஐஸ் கட்டிகள் வேகமாக உருகுவது நடந்து வருகிறது. சைபீரியாவில் அதிகமாக இப்படி ஐஸ் பாறைகள் உருகி வருகின்றன.இங்கு உருகிய ஐஸ் பாறைகளில் இருந்து 13 புதிய வைரஸ்களை கண்டுபிடித்து உள்ளனர். இந்த வைரஸ்கள் 48, 500 ஆண்டுகள் பழமையானது. இவை இத்தனை வருடங்களாக ஐஸ் பாறைகளுக்கு உள்ளே உறைந்த நிலையில் இருந்துள்ளது.
ஐஸ் பாறைகளுக்கு உள்ளே இருந்ததால் அவை சாகாமல் அப்படியே இருந்துள்ளன. இப்போதும் கூட அவர் பரவும் தன்மை கொண்டதாக இருந்துள்ளன. இந்த வைரஸ்களை ஸோம்பி வைரஸ்கள் என்று இதை ஆய்வு செய்த ஐரோப்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில்தான் சைபீரியாவில் ஐஸ் பாறைக்குள் கண்டுடிபிடிக்கப்பட்டு சாகாமல் இருந்த வட்டப்புழு ஒன்றை மொத்தமாக உயிர்ப்பிக்கும் ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கி உள்ளனர். 2018ல் இந்த வட்டப்புழு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட ரேடியோ கார்பன் சோதனையில் அது 46 ஆயிரம் ஆண்டுகள் முந்தையது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இவை 'dead awake' நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதாவது சாகாமல், ஐஸ் கட்டிக்குள் இத்தனை ஆண்டுகளாக மயக்க நிலையில் இருந்துள்ளது. இதைத்தான் தற்போது இங்கு உயிர்ப்பிக்க ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஜெர்மனியில் உள்ள Max Planck Institute என்ற இடத்தில் இதை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வட்ட புழுவிற்கு Panagrolaimus kolymaensis என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் வெறும் 40 மீட்டர் ஆழத்தில் உருக தொடங்கிய ஐஸ் பாறையில் இருந்து இந்த வட்டப்புழு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் வட்டப்புழு ஒன்று அதிக வயதில் ரெக்கார்ட் செய்யப்பட்டு 39 வருடங்கள்தான் . அதன்பின் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வட்டப்புழுதான் 48 ஆயிரம் வருடங்கள் பழையது . இதை தற்போது உயிர்பித்து மேலே கொண்டு வருவதற்கான ஆராய்ச்சிகளை ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications