"உளறும்" ஹேம்நாத்.. 4வது நாளாக விசாரணை.. சித்ரா மாமனாரிடம் போலீஸ் கிடுக்கிபிடி.. வழக்கு பாய்கிறதா!
நடிகை சித்ரா மரண வழக்கு தொடர்பாக இன்றும் விசாரணை நடக்கிறது
சென்னை: சித்ரா மரணம் தொடர்பாக டிவி சீரியலின் மொத்தம் 5 பேரை விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தினர் போலீஸார்.. இதைதவிர, சித்ரா தற்கொலை தொடர்பாக கணவர் ஹேம்நாத்திடம் 4வது நாளாக விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சித்ராவின் மரணம் தற்கொலையே என்று முதல்கட்ட போஸ்ட் மார்ட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டாலும், சித்ராவின் குடும்பத்தினர், நட்பு வட்டாரம் அதை ஏற்க மறுக்கிறது..
ஹேமந்திடம் 4வது நாளாக விசாரணை நடந்து வருகிறது.. ஹேம்நாத் முரண்பட்ட தகவலை அளிப்பதாக சொல்லப்படுகிறது.. அதனால்தான் நேற்று அம்பத்தூர் துணை கமிஷனர் தீபா சத்யன் நேரடியாகவே ஸ்டேஷனுக்கு வந்து அவரிடம் தனி ரூமில் தீவிரமான விசாரணையை நடத்தி உள்ளார்.

வழக்கு
அதனாலேயே ஆர்டிஓ விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், இந்த வழக்கில் அதிக அளவு தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் வழக்கு விசாரணையில், தெளிவு கிடைக்கும் பட்சத்தில் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது... இவை எல்லாமே ஆர்டிஓ விசாரணை தொடங்கப்பட்டு, அது முழுமை அடைந்த பின்னரே இறுதி செய்யப்படும் என்கின்றது போலீஸ் தரப்பு.

விசாரணை
அந்த வகையில்தான் இன்று 4-வது நாளாக ஹேமந்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது.. மற்றொரு புறம், சித்ரா கடைசியாக கலந்து கொண்ட சீரியல் நடிகர், நடிகைகளிடமும் விசாரணை நடந்துள்ளது.. குறிப்பாக அந்த சீரியலின் டைரக்டர் சிவசேகர், நடிகர்கள் ஸ்டாலின், சுஜிதா, குமரன், தங்கராஜன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது.

சீரியல்
ஷூட்டிங் ஸ்பாட்டில் சித்ரா எப்படி இருந்தார்? என்ன மன நிலையுடன் இருந்தார்? என்ற கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன.. அதற்கு அவர்கள், சித்ரா வழக்கம்போலவே தான் இருந்தார் என்றும், ஒரு வித்தியாசமும் தங்களுக்கு தெரியவில்லை, இயல்புடன்தான் காணப்பட்டார் என்று பதிலளித்துள்ளனர். இந்த 5 பேரும்தான், கடைசியாக நடித்த சீனில் ஒன்றாக இருந்துள்ளனர்.. அதனாலேயே இவர்களிடம் விசாரணை நடந்துள்ளது.

வாக்குமூலம்
இதற்கு அடுத்தபடியாக, நடிகர்கள் வெங்கட், ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சரவணன், விக்ரம் ஆகியோரிடம் இன்று விசாரணையை போலீசார் நடத்த உள்ளனர்.. இதைதவிர, ஹேம்நாத்தின் அப்பாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து, அவரிடம் வாக்குமூலம் பெறும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications