தமிழகத்தில் 2-வது அலை விஸ்வரூபம்.. 6,000-ஐ நெருங்கிய தினசரி பாதிப்பு.. இன்று 5,989 பேருக்கு கொரோனா!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
Recommended Video
தமிழகம் முழுவதும் முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது. சுமார் 5 மாதங்களுக்கு தினசரி பாதிப்பு 5,500-ஐ கடந்து செல்கிறது.
6,000-ஐ நெருங்கிய பாதிப்பு
கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. பஸ்களில் பயணிக்க கட்டுப்பாடு, தியேட்டர்கள், கோவில்கள், மால்கள் என அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ நெருங்கியுள்ளது.
5,989 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 9,26,816 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 12,886 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,952 பேர் குணமடைந்தனர்.
குணமடைந்தோர் எத்தனை பேர்?
இதுவரை மொத்தம் 8,76,257 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 37,673 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 83,895 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 2,01,01,836 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிக பாதிப்பு
சென்னை, கோவை, செங்கல்பட்டில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று 1977 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, பாதிப்பு 2,000-ஐ நெருங்கியது. செங்கல்பட்டில் 615 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 501 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 181 பேருக்கும், மதுரையில் 194 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.