சென்னை மெரினாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக 5 பேர் கைது!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரினாவில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்றதாக 5 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாசதுக்கம் பின்புறம் 5 பேர் பதுங்கி இருப்பதாகவும் ஈழத் தமிழர்களான அவர்கள் சட்டவிரோதமாக படகில் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும் கியூ பிரிவு போலீசாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு போலீசார், சூப்பிரண்டு பவானீஸ்வரி தலைமையில் மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
அண்ணாசதுக்கம் பின்புறம் பதுங்கி இருந்த இலங்கை தமிழர்கள் 5 பேரும் பிடிபட்டனர். அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு படகில் அனுப்ப ஏற்பாடு செய்திருந்த புரோக்கர் ஒருவரும் பிடிபட்டார். இவர்கள் 6 பேரையும் கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications