500 ரூபாய் நோட்டுகள் செல்லாதா? ரூ.500 நோட்டு மார்ச் மாதம் முதல் அவ்வளவுதானா? மத்திய அரசு விளக்கம்
சென்னை: 2000 ரூபாய் நோட்டை போலவே கூடிய விரைவில் அதாவது வருகிற மார்ச் மாதம் முதல் 500 ரூபாய் நோட்டுகளையும் இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்போகிறது, அன்றைய தினம் முதல் ரூ.500 செல்லாது என சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவி கொண்டிருக்கிறது.. இது சாமானிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்நிலையில், ரிசர்வ் வங்கி இதுகுறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.. அது என்ன?
சமீப நாட்களாகவே, 2026 மார்ச் மாதத்திற்குப் பிறகு ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படாது என்றும், அந்த நோட்டுகள் செல்லாததாக ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்தச் செய்தி பலரிடையே பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ளது.
ரூ.500 செல்லுமா, செல்லாதா
அரசுக்கு சொந்தமான பிஐபி, இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்படவில்லை என்றும், அப்படி எந்த முடிவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
இப்போது மக்கள் பயன்படுத்தி வரும் 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் முழுமையாக செல்லுபடியாகும். அவற்றை கடைகளில், வங்கிகளில், அன்றாட செலவுகளுக்கு வழக்கம் போல் பயன்படுத்தலாம். ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்ற தகவலும் தவறானது. ஏடிஎம்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெளிவாக தெரிவித்துள்ளார்.
நம்பகமான தகவல் இல்லை
இதற்கு முன்பும் 500 ரூபாய் நோட்டுகள் குறித்து இதே மாதிரியான வதந்திகள் பலமுறை பரவியுள்ளன. கடந்த வருடம் கூட ஒரு யூடியூப் வீடியோ மூலம் இந்த நோட்டுகள் செல்லாததாக ஆகும் என்று கூறப்பட்டபோது, அரசு உடனடியாக தலையிட்டு அந்தச் செய்தி பொய்யானது என்பதை நிரூபித்தது. இத்தகைய செய்திகளின் நோக்கம் மக்களிடையே தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதே ஆகும்.
பணமதிப்பிழப்பு போன்ற முக்கிய முடிவுகளை அரசு எடுக்கும் போது, அதை அதிகாரப்பூர்வமாகவும் முன்கூட்டியும் அறிவிக்கும். ரிசர்வ் வங்கியின் வெப்சைட் மற்றும் அரசு அறிவிப்புகள் மூலமாக மட்டுமே நாணயம் தொடர்பான தகவல்களை நம்ப வேண்டும்.
பொதுமக்கள் குழப்பம்
சோஷியல் மீடியாவில் வரும் சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பக்கூடாது என்றும், அவற்றை மற்றவர்களுக்கு அனுப்பக்கூடாது என்றும் பிஐபி கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே, 500 ரூபாய் நோட்டுகள் குறித்து பரவும் வதந்திகளை நம்ப தேவையில்லை. மக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி, வழக்கம் போல தங்கள் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். விழிப்புணர்வுடன் இருப்பதே இத்தகைய பொய்ச் செய்திகளைத் தடுக்க ஒரே வழி என்று அரசு தெரிவித்துள்ளது. இது ஒரு போலியான தகவல் என்ற தகவல் வெளியானதையடுத்து, பொதுமக்களிடம் நிம்மதி எழுந்துள்ளது..!
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications