சென்னையில் மீண்டும் "பஸ் டே" கொண்டாட்டம்... 6 மாணவர்கள் அதிரடி கைது
Recommended Video

சென்னை: "பஸ் டே" கொண்டாடிய அம்பேத்கர் கலைக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பஸ் டே கொண்டாட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பஸ் டே கொண்டாட்டத்தை தடுக்க காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இத்தனை தடைகளையும் தாண்டி தற்போது சென்னையில் மீண்டும் பஸ் டே கொண்டாட்டங்கள் தலைதூக்க தொடங்கி உள்ளது. வியாசர்பாடி அருகே தடையை மீறி நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் (57 எண்) மேற்கூரையில் நின்று கொண்டாடினர்.
கல்லூரி மாணவர்களின் கொண்டாட்டத்தால் போக்குவரத்த பாதிக்கப்பட்டது. சாலையில் சென்றவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இந்தநிலையில், தொலைக்காட்சியில் வெளியான புகைப்படத்தை ஆதாரமாக கொண்டு அம்பேத்கர் கலைக்கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்களை கைது செய்துள்ளதாக வியாசர்பாடி போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications