திருச்சி, மதுரை, கோவை உட்பட 6 மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி, மதுரை, கோவை, நாகர்கோவில் உட்பட 6 மாநகராட்சி அணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், திருவண்ணாமலை டி.ஆர்.டி.ஏ. திட்ட அலுவலராக இருந்த பிரதாப் கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். தருமபுரி டி.ஆர்.டி.ஏ திட்ட அலுவலராக இருந்த வைத்தியநாதன் திருச்சி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

6 Corporations including Trichy, Madurai, Coimbatore commissioners transferred

நெல்லை மாநகராட்சி ஆணையராக இருந்து வந்த விஷ்ணு சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சிவகிருஷ்ண மூர்த்தி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டு இருக்கிறார். கோவை வணிக வரித்துறையில் பணியாற்றி ஆனந்த் மோகன்
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சென்னை மாநகராட்சியில் பணியாற்றி சிம்ரன்ஜித் சிங் மதுரை மாநகராட்சி ஆணையராகவும் ஆவடி மாநகராட்சி ஆணையராக தார்ப்பகராஜ் ஐ.ஏ.எஸ்-ஐ நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+