கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி
சென்னை: தமிழ்நாடு முழுவதும் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதோடு உரிய அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் துறையின் அமைச்சர் டிகே பிரபு உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கையை தமிழக கனிமவளத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக எல்லையோர மாவட்டங்களில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் 300க்கும் அதிகமான லாரிகளில் கனிமவளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இதனை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இயற்கை வளங்கள் துறையின் அமைச்சர் டிகே பிரபு தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். தென்காசி - கேரளா எல்லையில் சோதனை சாவடியில் ஆய்வு செய்தார்.
கனிமவள கொள்ளையை தடுக்க வேண்டும். கல்குவாரிகளில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் வெட்டி எடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி கனிவளஅதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாடு முழுவதும் கனிம வளத்துறை சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் கனிமவளங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.
இக்கல்குவாரிகளில் அரசு அனுமதி அளித்த அளவிற்கு அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. அதேபோல, மாநில சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு ஆணையம் (SEIAA), கல்குவாரிகளில் எந்த அளவு கற்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் கல்குவாரிகளை கண்காணிக்கும் சேப்டி மைன்ஸ் எனப்படும் கண்காணிப்பு குழுவினர் முறையாக கண்காணிக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. கல்குவாரிகளை
எனவே. தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து கல்குவாரிகளின் அந்தந்த மாவட்ட கனிமவளத்துறையினர் ஆய்வு செய்து, கல்குவாரிகளில் அரசிடம் பெறப்பட்ட அனுமதி ஆணைப்படி கற்கள் வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வெட்டியெடுக்கப்பட்டுள்ளனவா, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுகின்றனவா. உரிய அனுமதியோடு கனிமங்கள்
வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என்பது உள்ளிட்ட அனைத்து இனங்களையும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் டிகே பிரபுவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டிகே பிரபு கடந்த வாரத்தில் தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறி செயல்பட்டு வந்த கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு முழுவதும் கனிமவளத்துறை அதிகாரிகள் கடந்த 1 வாரமாக தீவிர சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் 431 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 67 குவாரிகளின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீதம் உள்ள 88 குவாரிகளின் குவாரி பணியினை நிறுத்த மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில், 78 இடங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு சட்டவிதிகளின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கனிமங்கள் எடுத்துச் செல்லப்படும் வாகனங்களை சோதனை செய்ததில், சட்ட விரோதமாக கனிமங்கள் எடுத்துசென்ற 469 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய சட்டவிதிகளின்படி அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கப்பட்டது கனிமவளத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குபதிவு செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி குவார்ட்ஸ் கனிமம் வெட்டி எடுக்கப்பட்டது கனிமவளத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இனிவரும் காலங்களில் சுரங்கம் மற்றும் குவாரி பணிகளானது ஒப்புதல் பெற்ற சுரங்க திட்டத்தின்படியும் மற்றும் குவாரி குத்தகை நிபந்தனைகள்படியும் குத்தகைதாரர்கள் குவாரிபணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குத்தகைகாலம் முடிவுற்று காலாவதியான குவாரிகள் மற்றும் தற்போது இயக்கத்தில் இல்லாத குவாரிகள் அல்லது அரசு மற்றும் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுத்துச்செல்வது கண்டறியும்பட்சத்தில் சட்டவிதிகளின்படி அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications