Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தாரா நடிகர் பிரகாஷ் ராஜ்.. அதிகாரிகள் ஆய்வில் திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடைக்கானலில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி நடிகர் பிரகாஷ் ராஜ் சாலை பகுதியை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் பெயரில் பட்டா இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

குளு குளு பிரதேசமான கொடைக்கானலில் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு சொந்தமாக பங்களா உள்ளது. இந்த ரிசார்ட்டுக்கு செல்வதற்காக அரசு இடத்தை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

7 acres of land will be encroached by Actor Prakash Raj

இந்த பணிகளுக்காக இரு கனரக வாகனங்கள் வந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இரு சக்கர வாகனங்களுக்கே அனுமதி அளிக்கப்படாத போது இரு கனரக வாகனங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது.

அரசுக்கு சொந்தமான இடத்தில் பிரகாஷ் ராஜ் எப்படி சிமெண்ட் சாலையை அமைக்க முடியும், இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் ன கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். விவசாய பணிகளுக்காக ஜேசிபி வாகனங்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

ஆனால் பிரகாஷ் ராஜின் நிலத்தில் 25 நாட்களாக இரண்டு கனரக வாகனங்கள் இயங்குவதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள். அரசு இடத்தில் பாதையை அமைத்து விட்டு அதை பொது மக்கள் பயன்படுத்தக் கூடாது என பிரகாஷ்ராஜ் போர்டு வைத்துள்ளதாகவும் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த போர்டு அகற்றப்பட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் சதுப்பு நிலத்தில் அதாவது நன்செய் நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவு பிரகாஷ் ராஜ் பெயரில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒரு வேளை இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அது விரைவில் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை கணக்கு தணிக்கை குழு விரைவில் ஆய்வு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரகாஷ் ராஜின் பங்களாவிற்கு வணிக பயன்பாட்டுக்கான மின்சார அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் நடிகர் பாபி சிம்ஹா பங்களாவை ஒட்டி இருக்கும் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் அதிகாரிகள் தலையிட்டு அரசு இடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மின் பொறியாளர் கூறுகையில் பிரகாஷ் ராஜ் பங்களாவுக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மின் வாரிய விதிகளின்படி தற்காலிக இணைப்புக்கு பஞ்சாயத்து வரி ரசீது இருந்தால் போதும். கட்டட அனுமதி தேவையில்லை. கட்டுமான பணி முடிந்ததும் மீண்டும் மின்வாரியத்தை அணுகினால் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும். இதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+