சதுப்பு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தாரா நடிகர் பிரகாஷ் ராஜ்.. அதிகாரிகள் ஆய்வில் திடுக் தகவல்
சென்னை: கொடைக்கானலில் வில்பட்டி பகுதியில் விதிகளை மீறி நடிகர் பிரகாஷ் ராஜ் சாலை பகுதியை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் பெயரில் பட்டா இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
குளு குளு பிரதேசமான கொடைக்கானலில் பேத்துப்பாறை பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு சொந்தமாக பங்களா உள்ளது. இந்த ரிசார்ட்டுக்கு செல்வதற்காக அரசு இடத்தை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த பணிகளுக்காக இரு கனரக வாகனங்கள் வந்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இரு சக்கர வாகனங்களுக்கே அனுமதி அளிக்கப்படாத போது இரு கனரக வாகனங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது.
அரசுக்கு சொந்தமான இடத்தில் பிரகாஷ் ராஜ் எப்படி சிமெண்ட் சாலையை அமைக்க முடியும், இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் ன கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். விவசாய பணிகளுக்காக ஜேசிபி வாகனங்களை பயன்படுத்த அனுமதி இல்லை.
ஆனால் பிரகாஷ் ராஜின் நிலத்தில் 25 நாட்களாக இரண்டு கனரக வாகனங்கள் இயங்குவதற்கு எப்படி அனுமதி வழங்கினார்கள். அரசு இடத்தில் பாதையை அமைத்து விட்டு அதை பொது மக்கள் பயன்படுத்தக் கூடாது என பிரகாஷ்ராஜ் போர்டு வைத்துள்ளதாகவும் மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த போர்டு அகற்றப்பட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் சதுப்பு நிலத்தில் அதாவது நன்செய் நிலத்தில் 7 ஏக்கர் பரப்பளவு பிரகாஷ் ராஜ் பெயரில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒரு வேளை இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அது விரைவில் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை கணக்கு தணிக்கை குழு விரைவில் ஆய்வு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரகாஷ் ராஜின் பங்களாவிற்கு வணிக பயன்பாட்டுக்கான மின்சார அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் நடிகர் பாபி சிம்ஹா பங்களாவை ஒட்டி இருக்கும் 2 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் அதிகாரிகள் தலையிட்டு அரசு இடங்களை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின் பொறியாளர் கூறுகையில் பிரகாஷ் ராஜ் பங்களாவுக்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. மின் வாரிய விதிகளின்படி தற்காலிக இணைப்புக்கு பஞ்சாயத்து வரி ரசீது இருந்தால் போதும். கட்டட அனுமதி தேவையில்லை. கட்டுமான பணி முடிந்ததும் மீண்டும் மின்வாரியத்தை அணுகினால் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படும். இதில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications