"அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." டிக்டாக் வெளியிட்ட ரவுடிகளை தூக்கி உள்ளே போட்ட போலீஸ்!
போலீசுக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
சென்னை: "வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்று பாட்டிலேயே போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
போன வருஷம் ஜூலை 2-ந்தேதி ராத்திரி சென்னை ராயப்பேட்டை தர்கா அருகே ஒரு கும்பல் குடிபோதையில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது. இந்த கும்பலுக்கு தலைவன் ஆனந்தன் என்பவன்.
அந்த சமயத்தில் ரோந்துக்கு வந்த தலைமைக் காவலர் ராஜவேல், அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். ஆனால் அந்த கும்பலோ, போதைவெறியில் ராஜவேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ராஜவேலு படுகாயமடைந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

என்கவுண்டர்
இதையடுத்து அந்த ரவுடிகள் ஜிந்தா, வேல்முருகன், அஜித்குமார், சீனு, மகேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆனந்தன் எஸ்.ஆகிவிட்டார். ஜூலை 4-ந்தேதி ஆனந்தனை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால், ஆனந்தன் என்கவுன்டர் செய்யப்பட்டார்.

சுடுகாடு
இந்நிலையில், கடந்த 4-ந்தேதி ஆனந்தனின் முதலாமாண்டு நினைவுநாளை சக நண்பர்கள், ஆதரவாளர்கள் அனுசரித்தனர். இதற்காக ஆனந்தனை புதைத்த சுடுகாட்டின் பின்னணியில் ஒரு கானா பாட்டையும் பாடினார்கள்.

மிரட்டல்
அதில், " வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்ற வரிகள், மற்றும் ஆனந்தனை புகழ்ந்தும் வரிகள் இருந்தன. கானா பாட்டிலேயே போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இவர்கள், இந்த வீடியோவை இணையத்திலும் போட்டுவிட்டனர்.

கைது
வீடியோ வைரலானதையடுத்து, ராயப்பேட்டை போலீசாருக்கும் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, பாட்டாலேயே கொலை மிரட்டல் விடுத்த, சுரேஷ்குமார், விஜய், கார்த்திக், பிரசாத், கானா பாடகர் மணிகண்டன், சமீர் பாட்ஷா ஆகிய 7 பேரை ராயப்பேட்டை போலீஸார் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications