குவைத் தீ விபத்து: 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு வருகை! நல்லடக்கம் எப்போது?
சென்னை: குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் இருவரது உடல்கள் இரவே நல்லடக்கம் செய்யப்பட்டனய மற்றவர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்படும் என தெரிகிறது.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி பயங்கர தீவிபத்து நிகழ்ந்தது. குவைத் வரும் இந்தியர்கள் பலர் இந்த குடியிருப்பில் தங்குவார்களாம். அந்த வகையில் இங்கு தங்கியிருந்த 7 தமிழர்கள் உள்பட 50 பேர் பலியாகிவிட்டனர்.

கேரளாவை சேர்ந்த 24 பேரும் இறந்துவிட்டனர். அது போல் டெல்லி உள்ளிட்ட நிலங்களை சேர்ந்த 15 பேரும் இறந்துவிட்டனர். இந்த நிலையில் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் 31 பேரின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து தீவிபத்தில் இறந்த 7 தமிழர்களின் உடல்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து கொச்சியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கும் தமிழகத்தின் பிற விமான நிலையத்திற்கும் உடல்கள் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சின்னதுரை, சென்னை ராயபுரத்தை சேர்ந்த சிவசங்கர், திண்டிவனத்தை சேர்ந்த முகமது ஷெரிப், ராமநாதபுரத்தை சேர்ந்த கருப்பண்ணன் ராமு, திருச்சியை சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியை சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர்.
இவர்களின் உடல்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் கதறிய காட்சி காண்போர் மனதை கலங்க செய்தது. இறந்தவர்களில் மாரியப்பன், சிவசங்கர் ஆகியோரின் உடல்கள் இரவே தகனம் செய்யப்பட்டன. மற்றவர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்படும் என தெரிகிறது.
-
ஸ்டாலினுக்கு 41.2% சதவீத மக்கள் ஆதரவு! மீண்டும் முதலமைச்சராக வருவார் என CNN கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
தமிழகத்தில் அதிமுக கூட்டணி 114, திமுக 104..? IANS - Matrize வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்! -
முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்.. தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த அடுத்த நிமிடமே நடந்த மாற்றம் -
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும்.. தேர்தல் தேதிக்கும் இவ்வளவு கேப் ஏன்? கிளம்பும் சந்தேகம்! -
கரூர் எஸ்.பியை மாற்ற வேண்டும் என அண்ணாமலை சொன்ன அடுத்த சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையம் போட்ட ஆர்டர் -
ரஜினி பற்றி வாயை விட்ட ஆதவ் அர்ஜுனா.. பாய்ந்து வந்த பாஜக! அப்போ கூட்டணி இல்லையா! -
பீகாரை போல்! தமிழக பெண்களுக்கும் ரூ. 10000! இன்று காலை ரிலீஸ் செய்ய இருந்தாரா ஸ்டாலின்? பிளான் என்ன? -
Toll price: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! Fastag கட்டணமும் உயர்கிறது! மக்கள் அதிர்ச்சி! -
ஒரு வாக்குச்சாவடி கூட விடாமல் சக்கர நாற்காலிகள் இருக்கும்.. தேர்தல் ஆணையம் ஏற்பாடு! -
வங்கக்கடலில் நடந்த மாற்றம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எப்போது வரை பெயர் சேர்க்கலாம்? தேர்தல் ஆணையம் விளக்கம் -
இடி, மின்னலுடன் மழை.. ரெடியா இருங்க மக்களே! வானிலை மையம் ஜில் அப்டேட்












Click it and Unblock the Notifications