ஜோதி தலையில் 6 முறை சுத்தியால் அடித்த குடிகார ராமகிருஷ்ணன்.. சென்னையில் கொடுமை!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜோதி தலையில் சுத்தியால் அடித்த குடிகார ராமகிருஷ்ணன்.. சென்னையில் கொடுமை! -வீடியோ

    சென்னை: குடிகார ராமகிருஷ்ணன் மனைவியை சுத்தியாலேயே அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

    சென்னை புளியந்தோப்பு கார்ப்பரேஷன் லைன் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். 70 வயதாகிறது. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜோதி, வயது 60! இவர்களுக்கு 6 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

    70 year old man kills wife in Chennai

    கூலி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது, தண்ணி அடித்துவிட்டு வருவதுதான் ராமகிருஷ்ணனின் வழக்கம். அப்படித்தான் கடந்த 6-ம் தேதி வீட்டிற்கு வந்த ராமகிருஷ்ணன் குடிபோதையில் இருந்தள்ளார்.

    அப்போது, குடியிருக்கும் வீட்டை விற்று பணத்தை தரும்படி ஜோதியிடம் தகராறு செய்துள்ளார். இதற்கு ஜோதி மறுப்பு சொன்னார். ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன், பக்கத்தில் கிடந்த சுத்தியை எடுத்து ஜோதியின் தலையில் ஆறு தடவை ஓங்கி அடித்துள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஜோதி ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது சம்பந்தமாக புளியந்தோப்பு போலீசார் மறுநாளே ராமகிருஷ்ணனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவ்வளவு நாள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜோதி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கொலை முயற்சி வழக்கில் கம்பி எண்ணும் ராமகிருஷ்ணன் மேல், இப்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+