பாலை வார்த்த ஸ்டாலின்.. தொற்றால் பெற்றோரை இழந்த 75 பிஞ்சுகள்.. திருச்சியில்.. விரைவில் டெபாசிட்..!
திருச்சியில் பெற்றோரை இழந்த 75 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்
சென்னை: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து 75 குழந்தைகள் தவித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 75 குழந்தைகளா? என்ற ஆச்சரியமும், வேதனையும் சூழ்ந்துள்ளது..! அதேசமயம் இவர்களுக்கான உதவியை செய்வதில் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
கொரோனா பல பேரை கொன்றெடுத்துவிட்டது.. இதில் முதல் அலையைவிட இரண்டாவது அலையில்தான் அதிக அளவு இறப்புகளை சந்திக்க நேரிட்டது.
எனவேதான், கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கூட விடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டும் வருகிறது.

அறிவுரை
இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் முன்னெடுத்தது.. பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் நலனை காக்கவும் பல்வேறு நடவடிக்கையை எடுக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தது.

முக ஸ்டாலின்
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்காக சிறப்பு திட்டத்தின்படி, கொரோனாவுக்கு தாய்-தந்தை இருவரையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் அவர்களின் பெயர்களில் டெபாசிட் செய்யப்பட உள்ளது.

குழந்தைகள்
இந்த சிறப்பு புனர்வாழ்வு நிதிக்கு தகுதியான குழந்தைகளின் விவரங்களை சேகரிக்கும் பணி அரசின் துறைகள் சார்பில் திருச்சி மாவட்டத்தில் நடந்து வருகிறது.. அப்போதுதான் 75 குழந்தைகள் தொற்றால் பெற்றோரை இழந்தும் தவித்தும் வருவது கண்டறியப்பட்டுள்ளது... அவர்களில் 3 குழந்தைகள் அப்பா, அம்மா 2 பேரையுமே இழந்துவிட்டனராம். மீதமுள்ள 72 குழந்தைகள் இருவரில் ஒருவரை இழந்து தவித்து வருவது தெரியவந்துள்ளது.

விவரங்கள்
இதை பற்றி கலெக்டர் சிவராசு சொல்லும்போது, "கொரோனாவால் பெற்றோரை இழந்து பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கூட விடுபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 75 குழந்தைகளின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது... புனர்வாழ்வு நிதிபெற கொரோனாவால் இறந்ததற்கான ஆஸ்பத்திரி சான்றிதழ், இறப்பு சான்றிதழ், ஆர்டிபிசிஆர் டெஸ்ட் முடிவுக்கான ஆவணம் போன்றவை இருக்க வேண்டும்" என்றார்.
-
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ்












Click it and Unblock the Notifications