சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 கவுன்சிலர்கள் உள்ளனர். சட்டப்படி ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் திமுகவை சேர்ந்த மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்பட 157 கவுன்சிலர்கள் தங்களின் சொத்து விவரங்களை 4 ஆண்டுகளாகியும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. வெறும் 43 கவுன்சிலர்கள் மட்டுமே சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் திமுக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 13 வார்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக தலா 4 வார்டுகள், மதிமுக 2, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றன.

75-percent-of-chennai-corporation-couclillors-including-mayor-priya-and-his-deputy-yet-to-declare-th

அதிமுகவினர் 15 வார்டுகளிலும், பாஜக அமமுக தலா ஒரு வார்டுகளிலும், 5 சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர். இதன்மூலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. திமுகவை சேர்ந்த பிரியா மேயராகவும், மகேஷ் குமார் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பொதுவாக தேர்தல் முடிந்து கவுன்சிலரானவுடன் 90 நாட்களுக்கும் ஒவ்வொருவரும் தங்களின் சொத்து விவரங்களை முறையாக மாநகராட்சி ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதிக்குள் அதுபற்றிய தகவலை புதுப்பித்து வர வேண்டும்.

இது சட்டமாகும். இதனை சென்னை மாநகராட்சி சட்டம் 1973 உறுதி செய்கிறது. இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து மற்றும் கடன் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களும் அடங்கும்.

கவுன்சிலர்களின் சொத்து விவரங்கள் பொது ஆவணமாக வைக்கப்பட வேண்டும். கவுன்சிலர்கள் பற்றி வெளிப்படைத்தன்மையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. அதோடு ஊழலை தடுக்கவும் இது கொண்டு வரப்பட்டது. இந்த விவரங்களை மாநகராட்சி ஆணையர் பராமரிப்பார்.

அதேபோல் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்ட விதிகள் திருத்தம் 2022 (TNULB ACT Amendment) 31வது பிரிவும், மேயர், துணை மேயர் உள்பட கவுன்சிலர்கள் பதவியேற்ற 90 நாட்களில் அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் சென்னை மாநகராட்சியை எடுத்து கொண்டால் வெறும் 43 கவுன்சிலர்கள் மட்டுமே தங்களின் சொத்து விவரங்களை முறையாக தாக்கல் செய்துள்ளனர். இன்னும் 157 கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மாநகராட்சி கவுன்சிலராக கடந்த 2022ம் ஆண்டு வென்ற நிலையில் 4 ஆண்டு ஆகியும் சொத்து விவரங்களை வழங்காமல் தாமதித்து வருகின்றனர்.

மேற்கண்ட இந்த தகவல் வழக்கறிஞர் ஜிஎம் சங்கர் கேட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியின் சட்ட அணியின் உறுப்பினராக உள்ளார். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து பதிவு தொடர்பாக வழக்கறிஞர் ஜிஎம் சங்கர் கேட்ட கேள்விக்கு ஜுன் 2ம் தேதி தகவல் அளிக்கப்பட்டது.

இதுபற்றி கவுன்சிலர்களிடம் கேட்டபோது, ''எங்களுக்கு சொத்து விவரங்கள் தாக்கல் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தான் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வில்லை'' என்றார். துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், ''இதுபற்றிய முறையான அறிவிப்பு எனக்கு வரவில்லை. இதுபற்றி இப்போது தான் எனக்கு தெரியும். விரைவில் என் சொத்து விவரங்களை தாக்கல் செய்வேன்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+