சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி'
சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 கவுன்சிலர்கள் உள்ளனர். சட்டப்படி ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் திமுகவை சேர்ந்த மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்பட 157 கவுன்சிலர்கள் தங்களின் சொத்து விவரங்களை 4 ஆண்டுகளாகியும் இன்னும் தாக்கல் செய்யவில்லை. வெறும் 43 கவுன்சிலர்கள் மட்டுமே சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் திமுக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 13 வார்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக தலா 4 வார்டுகள், மதிமுக 2, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றன.

அதிமுகவினர் 15 வார்டுகளிலும், பாஜக அமமுக தலா ஒரு வார்டுகளிலும், 5 சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர். இதன்மூலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. திமுகவை சேர்ந்த பிரியா மேயராகவும், மகேஷ் குமார் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுவாக தேர்தல் முடிந்து கவுன்சிலரானவுடன் 90 நாட்களுக்கும் ஒவ்வொருவரும் தங்களின் சொத்து விவரங்களை முறையாக மாநகராட்சி ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதிக்குள் அதுபற்றிய தகவலை புதுப்பித்து வர வேண்டும்.
இது சட்டமாகும். இதனை சென்னை மாநகராட்சி சட்டம் 1973 உறுதி செய்கிறது. இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு கவுன்சிலர்களும் தங்களின் அசையும் மற்றும் அசையா சொத்து மற்றும் கடன் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்களும் அடங்கும்.
கவுன்சிலர்களின் சொத்து விவரங்கள் பொது ஆவணமாக வைக்கப்பட வேண்டும். கவுன்சிலர்கள் பற்றி வெளிப்படைத்தன்மையை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. அதோடு ஊழலை தடுக்கவும் இது கொண்டு வரப்பட்டது. இந்த விவரங்களை மாநகராட்சி ஆணையர் பராமரிப்பார்.
அதேபோல் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்ட விதிகள் திருத்தம் 2022 (TNULB ACT Amendment) 31வது பிரிவும், மேயர், துணை மேயர் உள்பட கவுன்சிலர்கள் பதவியேற்ற 90 நாட்களில் அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் சென்னை மாநகராட்சியை எடுத்து கொண்டால் வெறும் 43 கவுன்சிலர்கள் மட்டுமே தங்களின் சொத்து விவரங்களை முறையாக தாக்கல் செய்துள்ளனர். இன்னும் 157 கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் மாநகராட்சி கவுன்சிலராக கடந்த 2022ம் ஆண்டு வென்ற நிலையில் 4 ஆண்டு ஆகியும் சொத்து விவரங்களை வழங்காமல் தாமதித்து வருகின்றனர்.
மேற்கண்ட இந்த தகவல் வழக்கறிஞர் ஜிஎம் சங்கர் கேட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியின் சட்ட அணியின் உறுப்பினராக உள்ளார். சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து பதிவு தொடர்பாக வழக்கறிஞர் ஜிஎம் சங்கர் கேட்ட கேள்விக்கு ஜுன் 2ம் தேதி தகவல் அளிக்கப்பட்டது.
இதுபற்றி கவுன்சிலர்களிடம் கேட்டபோது, ''எங்களுக்கு சொத்து விவரங்கள் தாக்கல் செய்வதற்கான படிவங்கள் வழங்கப்படவில்லை. இதனால் தான் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வில்லை'' என்றார். துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், ''இதுபற்றிய முறையான அறிவிப்பு எனக்கு வரவில்லை. இதுபற்றி இப்போது தான் எனக்கு தெரியும். விரைவில் என் சொத்து விவரங்களை தாக்கல் செய்வேன்'' என்றார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்















Click it and Unblock the Notifications